நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
இரவின் நிழல், டீன்ஸ் படங்களை இயக்கிய பார்த்திபன் அடுத்து 3 படங்களில் கவனம் செலுத்துகிறார். இது குறித்து அவரே பேசியுள்ளார். அவர் கூறுகையில், ''அடுத்து ஆண்டாள் என்ற படத்தை இயக்க உள்ளேன். ‛லப்பர் பந்து' சுவாசிகா ஹீரோயின். தலைப்பில் இருந்தே இது ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள படம் என தெரியும். டூரிஸ்ட் பேமிலி மாதிரி இது பக்கா குடும்பக்கதை.
அதற்கடுத்து ‛ஆடியன்ஸ்சும் ஆவுடையப்பனும்' என்ற விருது படத்தை இயக்க உள்ளேன். அந்த படத்தின் முயற்சியும், சிங்கிள் ஷாட்டும் பேசப்படும். விரைவில் என் மகன் ராக்கி இயக்குனர் ஆகப்போகிறார். அவன் படத்திலும் ஒரு ரோலில் நடிக்கிறேன். அதில் வடிவேலுவை நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது'' என்று கூறியுள்ளார்.
தவிர, சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அர்ஜூன்தாஸை வைத்து படம் இயக்க முயற்சிக்கிறேன் என கூறியுள்ளார். ஆக, அடுத்து 3 படங்களில் பார்த்திபன் தீவிரமாக இருக்கிறார்.