ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி |
விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி ஹீரோவாக அறிமுகமான ‛பீனிக்ஸ்' பெரிதாக வெற்றி பெறவில்லை. சில செயல்பாடுகளால் அவரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர். இப்போது அதிலிருந்து அவர் மீண்டுவிட்டார். அடுத்தபடம் குறித்து இன்னமும் முடிவெடுக்காமல் இருக்கிறாராம். இதற்கிடையே, எனக்கு நடிப்பில் மட்டுமல்ல, படம் டைரக்ஷன் பண்ணுவதிலும் ஆர்வம் இருக்கிறது. முறைப்படி டைரக்ஷன் கோர்ஸ் படித்து இருக்கிறேன். சில குறும்படங்களை இயக்கி இருக்கிறேன் என்று சூர்யா சேதுபதி கூறி வருவதால் அவர் அடுத்து படம் இயக்கலாம் என்று கூறப்படுகிறது.
விஜய் சேதுபதியே தயாரிப்பாளர் ஆகவும் இருப்பதால், ஆரஞ்சுமிட்டாய், மேற்கு தொடர்ச்சி மலை போன்ற படங்களை தயாரித்து இருப்பதால் மகன் இயக்கும் படத்தை தயாரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேப்போல் நடிப்பில் கவனம் செலுத்தி வந்த கருணாஸ் மகன் கென்னும் இப்போது இயக்குனர் ஆகிவிட்டார். ஒரு படத்தை இயக்குகிற வேலைகளில் பிஸியாக இருக்கிறார். விஜய் மகன் ஜேசனும் படம் இயக்கி வருகிறார்.