வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் |

பொதுவாக, சினிமாவில் ஒரு கட்டத்துக்குபின் ஹீரோயின்களுக்கு மார்க்கெட் போய்விடும். தொடர்ச்சியாக தோல்வி படம் கொடுத்தாலோ, திருமணம் ஆனாலோ, சர்ச்சை, பந்தாவில் சிக்கினாலோ அவர்கள் காணாமல் போய்விடுவார்கள். சிலருக்கு வயதாகிவிட்டதால் பட வாய்ப்புகள் கிடைக்காது.
அப்படிப்பட்டவர்களில் கொஞ்சம் பெரிய ஹீரோயின்கள் என்றால், அந்த காலகட்டங்களில் 'கதை நாயகியாக' அதாவது, ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள படங்களில் நடிப்பது வழக்கம். சின்ன ஹீரோயின் என்றால் வில்லியாக, குணசித்திர ரோலில் நடிக்க ஆரம்பித்து விடுவார்கள். நடிகை அனுஷ்கா இப்போது காட்டி என்ற படத்தில் பக்கா ஆக் ஷன் ரோலில் நடித்து வருகிறார். இதில் விக்ரம் பிரபு, ரம்யா கிருஷ்ணனும் இருக்கிறார்கள்
சிம்ரனும் தி லாஸ்ட் ஒன் படத்தில் ஆக் ஷனுக்கு மாறியிருக்கிறார். ரிவால்வர் ரீட்டாவில் கீர்த்தியும் துப்பாக்கி வைத்து சண்டைபோடுகிறார். ஆர்.கண்ணன் இயக்கும் காந்தாரி படத்தில் ஹன்சிகா கடுமையாக சண்டைபோட்டு இருக்கிறார். நயன்தாராவும், திரிஷாவும் திரில்லர், ஆக் ஷன் படங்களில் நடிக்க ஆர்வம் காண்பிக்கிறார்கள். சமீபத்தில் வெளியான உசுரே படத்தில் வில்லியாக நடித்தார் மந்த்ரா. விடாமுயற்சி படத்தில் வில்லியாக நடித்த ரெஜினா அந்த மாதிரி ரோலில் மற்ற மொழிகளிலும் சில படங்களில் நடித்து வருகிறார்.