இதுவரை நடித்திராத கேரக்டரில் சுனில் : கண் பார்வையற்றவராக நடிக்கும் ஹீரோ | முதல் நாள் சாதனை வசூலை நோக்கி 'கூலி' | அயோத்தி, பார்க்கிங், மகாராஜா, லப்பர் பந்து இயக்குனர்களின் அடுத்த படம்? | 5 மொழிகளில் வெளியான ஆனந்தியின் வெப் சீரிஸ் | 'பிளாக் கோல்டில்' நிழல் உலக மாபியாக்களின் கதை | விஜய், அஜித்துக்கு வாழ்த்து, ரஜினிக்கு பாராட்டு : 30 ஆண்டை தொட்ட சிம்ரன் பேட்டி | 3 முதல்வர்கள் திறந்து வைத்த கே.பி.சுந்தராம்பாள் தியேட்டர் இடிப்பு | தனுசுடன் காதலா? : சிரிப்புதான் வருகிறது என்கிறார் மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக்: சபதத்தை நிறைவேற்றிய ராமராஜன் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் படத்தில் நடித்த நம்பியார் |
தரமணி, ஜெயிலர் படங்களில் நடித்த வசந்த் ரவியின் அடுத்த படம் இந்திரா. புதுமுக இயக்குனர் சபரீஷ் நந்தா இயக்கியுள்ளார். சீரியல் கொலை பின்னணியில் இந்த கதை உருவாகி உள்ளது. ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள படமா என்றால், இல்லை. ஹீரோ கேரக்டர் பெயர் இந்திரன். அதனால், இந்த தலைப்பு.
கண்பார்வை பறி போன முன்னாள் போலீஸ் அதிகாரியாக ஹீரோ வருகிறார். அவர் எப்படி வில்லனை கண்டுபிடிக்கிறார் என்ற ரீதியில் கதை செல்கிறது. ராஜாவின் பார்வையிலே என்று தலைப்பு வைக்க நினைத்தோம். அது முடியாததால் இந்த தலைப்பு என்கிறார்கள்.
தெலுங்கில் பிரபல காமெடியன், இப்போது புஷ்பா வில்லன் புகழ் சுனிலுக்கு இதிலும் வில்லன். படம் குறித்து அவர் பேசுகையில், ‛‛நான் இந்த மாதிரி கேரக்டரில் நடித்தது இல்லை. ஏன் கேள்விப்பட்டதும் இல்லை. டப்பிங் பேசியபோது எனக்கே பயமாக இருந்தது. 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன், 1000 படங்களுக்கு மேல் பார்த்துள்ளேன். ஆனால் இது மாதிரியான ஒரு கதை பார்த்ததே இல்லை. இது ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும்'' என்கிறார்.
மெஹ்ரீன் பிர்சாடா ஹீரோயினாக நடிக்கிறார், அஜித் மகளாக நடித்த அனிகாவுக்கு முக்கியமான வேடம். 1995ம் ஆண்டும் இந்திரா என்ற தலைப்பில் ஒரு படம் வந்தது. சுகாசினி இயக்க, அரவிந்த்சாமி, அனுஹாசன் நடித்து இருந்தனர்.