கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா மற்றும் பலர் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த படம் 'தக் லைப்'. இந்தப் படத்திற்கு கடுமையான விமர்சனங்களே அதிகம் வந்தன. தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் சினிமா ரசிகர்கள் படம் பற்றி அதிகமாகவே கமெண்ட் செய்தார்கள்.
இந்நிலையில் தெலுங்குத் திரையுலகத்தின் இளம் இயக்குரான பணிந்திர நர்செட்டி, மணிரத்னத்தை விமர்சிக்க ஒரு தகுதி வேண்டும் என்றும் காட்டமாகப் பேசியுள்ளார். அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள '8 வசந்தலு' படத்திற்காக அவர் அளித்த பேட்டி ஒன்றில் பேசும் போது, “ஒவ்வொருவருக்கும் அவரவர் கருத்துகளை வெளிப்படுத்த உரிமை இருக்கிறது. இருந்தாலும் மற்றவர்களைப் பற்றி கருத்து தெரிவிப்பதற்கு முன்பு நமக்கு ஒரு தகுதி இருக்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
'தக் லைப்' படம் வெளியான பின்பு, மணிரத்னம் எப்படி படங்களை உருவாக்க வேண்டும் என ரசிகர்கள் கற்றுக் கொடுக்கிறார்கள். இத்துறையில் 40 ஆண்டுகளாக இருக்கும் புகழ் பெற்ற இயக்குனர் மணிரத்னத்திற்கு பாடம் சொல்லித் தருகிறார்கள்.
இத்தனை ஆண்டு காலம் அவரது படங்களைப் பார்த்து போற்றிய ஒருவருக்கு நிச்சயமாக விமர்சிக்கும் உரிமை உண்டு. அவர்களால் மட்டுமே அந்த வலியை அறிய முடியும். ஆனால், சினிமா பற்றிய அறிவு கூட இல்லாதவர்கள் கருத்துக்களைச் சொல்லிவிட்டு கடந்து போகிறார்கள். எனவேதான், நான் இங்கே 'தகுதி' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன்,” எனக் கூறியுள்ளார்.
சமீப காலங்களில் 'கருத்து' சொல்கிறோம், என சமூக வலைதளங்களில் கண்டபடி மரியாதை இல்லாமல் தரக்குறைவான விதத்தில் எழுதுவதும், வீடியோக்களில் பேசுவதும் பலருக்கு வாடிக்கையாகிவிட்டது.
சில யு டியூப் விமர்சனங்களில் கூட 'தக் லைப்' படம் பற்றி விமர்சனத்தை விட தனி நபர் தாக்குதல்கள்தான் அதிகம் இருந்ததாக பரவலான கருத்து உள்ளது.
தமிழ் இயக்குனர்கள் யாருமே மணிரத்னத்திற்கு ஆதரவாகப் பேசாத நிலையில் ஒரு தெலுங்கு இயக்குனர் இப்படி பேசியிருப்பது வரவேற்க வேண்டிய ஒன்று.