விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தில் நடித்த பூர்ணாவை கோலிவுட்டில் சின்ன அசின் என்று செல்லமாக அழைக்கிறார்கள். இவருக்கு முனியாண்டிக்கு பிறகு எந்த படமும் வெளியாகாத நிலையில் தற்போது வித்தகன், துரோகி, கந்தகோட்டை, அர்ஜூனன் காதலி என பிஸியாக இருக்கிறார். ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி என்று கேட்டால், எனக்கு தமிழ், மலையாளம், கன்னட படங்களில் நடிக்க வாயப்பு கிடைத்தது. ஒரே நேரத்தில் எல்லா படங்களையும் ஒப்புக் கொண்டால் சரிவராது என்பதால் வாய்ப்புகளை குறைத்துக் கொண்டேன் என்கிறார் விவரமாக. இவர் தற்போது நடித்து வரும் படங்களில் துரோகி படம் ரொம்பவே வித்தியாசமானது. படத்தின் இயக்குனர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் என எல்லோருமே பெண்கள். இதுபற்றி பூர்ணா கூறுகையில், பொதுவாக படப்பிடிப்பில் ஆண்களுடைய குரல்தான் ஓங்கி ஒலிக்கும். ஆனால், இந்தப் படத்தை பொருத்தவரைக்கும் பெண்களின் குரல்தான் எந்தப் பக்கம் திரும்பினாலும் கேட்கும். இந்தப் படத்தை மணிரத்னத்தின் உதவியாளரான சுதா மேடம் இயக்க, இந்திரா மேடம் தயாரிக்கிறாங்க. படத்தில் விஷ்ணு, ஸ்ரீகாந்த் என இரண்டு கதாநாயகர்கள். நான் விஷ்ணுவிற்கு தங்கையாகவும், ஸ்ரீகாந்திற்கு நாயகியாகவும் நடிக்கிறேன். பெண்களோடு சேர்ந்து வேலைப் பார்க்கும்போது கொஞ்சம் ரிலாக்ஸாக இருப்பதாக உணர்ந்தேன். படப்பிடிப்பிற்கு போய்விட்டால் எல்லாரிடமும் எளிதாக பழகலாம், பேசலாம், அரட்டை அடிக்கலாம். ஆனால் மற்ற படப்பிடிப்புகளில் அப்படி செய்ய முடியாது, அவ்வளவுதான், என்றார்.