வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் |

சூர்யா, ஜோதிகா தம்பதியினர் தங்கள் வாரிசுகள் தியா, தேவ் பெயரில் தொடங்கிய பட நிறுவனம் 2டி என்டர்டெயின்மென்ட். இந்த கம்பெனி '36 வயதினிலே, பசங்க 2, மகளிர் மட்டும், 24, சூரரைப்போற்று, கடைக்குட்டி சிங்கம், மெய்யழகன்' உள்ளிட்ட 17 படங்களை தயாரித்தது. சில படங்கள் லாபத்தையும், சில படங்கள் ஏமாற்றத்தையும் தந்தன.
இப்போது இந்த நிறுவனம் சார்பில் படங்கள் தயாரிக்கப்படுவது இல்லை. ஜோதிகா மும்பையில் இருப்பதாலும், சூர்யா நடிப்பில் பிசியாக இருப்பதாலும், சினிமா நிலவரம் மோசமாக இருப்பதாலும் 2டி நிறுவனம் படத்தயாரிப்பு பணிகளை நிறுத்தி வைத்துள்ளது என்று கூறப்படுகிறது. நல்ல கதை அமைந்தால் மீண்டும் படத்தயாரிப்பில் ஈடுபடும் என்கிறார்கள்.
பெரும்பாலும் இந்த நிறுவனம் சூர்யா, கார்த்தி, ஜோதிகா நடித்த படங்களை தயாரித்தது. இப்போது சினிமா பிசினஸ் நிலவரம் மோசமாக இருப்பதால் சொந்த நிறுவனத்தில் படம் தயாரித்து ரிஸ்க் எடுக்க வேண்டாம் என நினைக்கிறார்களாம்.