ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |
'அன்னக்கிளி' படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா. அவரை இசையமைப்பாளர் ஆக்கியவர் மறைந்த தயாரிப்பாளர், கதாசிரியர் பஞ்சு அருணாசலம். ராஜ்கிரண் நடித்த 'மாணிக்கம்' படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனார் இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக்ராஜா, 'அரவிந்தன்' படத்தின் யுவன் சங்கர் ராஜாவை இசையமைப்பாளர் ஆக்கியவர் தயாரிப்பாளர் டி.சிவா.
இப்போது கார்த்திக்ராஜா மகன் யத்தீஸ்வர் பக்தி பாடல் இசையமைத்து விட்டார். சினிமாவுக்கு இசையமைக்க ரெடி என்கிறார். அவரை யார் இசையமைப்பாளர் ஆக்கப்போகிறார்கள்? ராஜாவின் பேரன் எப்போது சினிமாவில் என்ட்ரி ஆகப்போகிறார்? என்ற கேள்வி எதிர்பார்ப்புடன் கேட்கப்படுகிறது. இளையராஜா குடும்பத்தில் மறைந்த பவதாரினி, நடிகர் பிரேம்ஜி அமரன் ஆகியோரும் இசையமைப்பாளர்களே. இந்தியளவில் அதிக இசையமைப்பாளர்களை கொண்ட குடும்பம் என்ற பெருமை ராஜாவுக்கு உண்டு.