ஆர்யா படத்தில் நடிக்கமாட்டேன்: அபர்ணதி சொன்னது ஏன்? | ஓடிடியிலும் வரவேற்பு பெற்ற ஆட்டோகிராப் : சேரன் மகிழ்ச்சி | 'தாய்கிழவி' நல்ல லாபம்; அடுத்தடுத்து படங்களை தயாரிக்கும் சிவகார்த்திகேயன் | சூரி, ரவிக்குமார் படத்தின் கதை என்ன தெரியுமா... | என்னை வேறொரு கோணத்தில் காட்டும் படம்: ஜதின் சர்னா | பாராட்டுகளை பெற்ற 'லிட்டில் விங்க்ஸ்': உயிரோடு இல்லாத இருவர் | தேசிய விருது பெற்ற தமிழ் குறும்படம் யு-டியூப்பில் வெளியாகிறது | 'ஹபீபி' படம் சாத்தியமாக 20 ஆண்டுகள் ஆனது : மீரா கதிரவன் | பிளாஷ்பேக்: இயக்குனராக போராடிய பஞ்சு அருணாசலம் | பிளாஷ்பேக்: அவ்வையாக நடித்த ஆண் நடிகர் |

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், பிரதீப் ரங்கநாதன், கிர்த்தி ஷெட்டி, எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி'. செப்டம்பர் 18ம் தேதியன்று இப்படம் வெளியாகும் என மே மாதமே அறிவித்துவிட்டார்கள். ஆனால், கடந்த சில நாட்களாக இப்படம் தள்ளி வைக்கப்படுகிறது என்று தகவல்கள் வெளியாகின. அடுத்த வருடத்திற்கே தள்ளி வைத்துவிட்டார்கள் என்று கூட சிலர் பேசி வருகிறார்கள்.
இதனிடையே, இந்தப் பட வெளியீட்டிற்கு இசையமைப்பாளர் அனிருத் ஒரு காரணம் என்ற தகவல் கசிந்துள்ளது. படத்தின் பின்னணி இசையை விரைந்து முடிக்க முடியாது என அவர் தரப்பில் சொல்லப்பட்டதாம். அதனால் வேறு வழியின்றி படக்குழு சம்மதம் சொல்லிவிட்டதாம்.
தீபாவளியை முன்னிட்டு பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'டியூட்' படம் வெளியாவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்குப் பிறகு 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தை வெளியிடலாம் என்று பிரதீப்பும் சொல்கிறாராம். இது அடுத்து ஏதாவது ஒரு பஞ்சாயத்தில் போய் நிற்கப் போகிறதா அல்லது சுமூகமாக போவார்களா என்பது விரைவில் தெரிய வரும்.