பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சம்மன் | உஸ்தாத் பகத்சிங் படத்தில் இணைந்த ராஷி கண்ணா | தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ‛இட்லி கடை' முதல் பாடல் | மீண்டும் படம் தயாரித்து, நடிக்கப்போகும் சமந்தா | பெத்தி படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய ராம் சரண் | விஜய்க்கு அரசியல் கட்சி துவங்க தைரியம் வந்ததே இப்படித்தான் : பார்த்திபன் வெளியிட்ட தகவல் | 10 ஆண்டுகளாக சத்தமே இல்லாமல் சூர்யா செய்து வரும் உதவி | அரசியலில் விஜய் ஜெயிப்பது ரொம்ப கஷ்டம் : ரஜினி அண்ணன் சத்ய நாராயணா | அரசியலில் நான் 'பேமஸ்'; சினிமாவில் நான் 'ஆவரேஜ்': பவன் கல்யாண் ஓபன் டாக் | ஸ்கூல் ரியூனியன் : 50 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களை சந்தித்த நாசர் |
எட்டுத்தோட்டாக்கள், ஜீவி, வனம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் வெற்றி. இவர் நடிப்பில் அனிஸ் அஷ்ரப் இயக்கத்தில் கிரைம் திரில்லராக வர உள்ள படம் 'சென்னை பைல்ஸ் - முதல் பக்கம்'. ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் தான் இந்த இயக்குனர். நீங்க தொடர்ச்சியாக இப்படிப்பட்ட திரில்லர் கதைகளில் நடிப்பது ஏன் என்று வெற்றியிடம் நிருபர்கள் கேட்க, 'நான் கலர்புல் கதைகளில் நடிக்க ஆசைப்படுகிறேன். எனக்கு இப்படிப்பட்ட கதைகள் அதிகம் வருகிறது. இப்போது சினிமாவை பொறுத்தவரையில் கருதான் முக்கியம். அது நல்லா இருந்தால், எந்த படமும் ஓடும்.
இயக்குனர் அனிஸ் இயக்கிய குறும்படத்தை பார்த்தேன். அதிலிருந்து நம்பிக்கை பிறந்தது. நீண்ட நாட்களுக்குப்பிறகு உணர்வுப்பூர்வமான கிரைம் திரில்லர் படத்தை உருவாக்கி இருக்கிறோம். ஆகஸ்ட் ஒன்றாம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகிறது.'' என்றார்.
இதில், ‛இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், காளி' படங்களில் ஹீரோயினாக நடித்த ஷில்பா மஞ்சுநாத் ஹீரோயின். அவர் கதைப்படி பத்திரிகையாளராக வருகிறார். சிங்கப்பூரை சேர்ந்த தொழிலதிபர் மகேஸ்வரன் தேவதாஜ் வில்லனாக நடித்து, படத்தை தயாரித்து இருக்கிறார். இந்த படத்தின் எடிட்டிங் பணிகள் மட்டுமே ஓராண்டு நடந்ததாம்.