மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரிகிடா சகா! | நாட்டின் மிகப்பெரிய நட்சத்திரத்தோடு போட்டியிட முடியுமா? சுதா கொங்கரா | மீண்டும் தள்ளிப்போனது 'தெறி' ரீ ரிலீஸ் | மதுரை, திருநெல்வேலி, திருச்செந்துார்... ஜீவா ஓடுவது ஏன்? | மீண்டும் ஷாருக்கானுடன் இணையும் அட்லி: 'டான் 3'ஐ இயக்குகிறாரா? | ரவி மோகனின் நிழலாக இருக்கும் கெனிஷா | 35 ஆண்டுகளுக்கு பிறகும் ஹிட்டான 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி' | பிளாஷ்பேக்: மறைந்த மலையாள நடிகர் ஜெயனை நினைவு கூறும் ஒரே தமிழ் திரைப்படம் “பூட்டாத பூட்டுக்கள்” | மங்காத்தா, தெறி: ரீரிலீஸ் டிரைலர் மோதல் | தோல்வியை நோக்கி, பிரபாஸின் 'தி ராஜா சாப்' |

ஒரே படம், ஓஹோனு வாழ்க்கை என ஜெயித்தவர் கயாடு லோஹர். டிராகன் படத்தில் வெற்றியும், அவரின் பாடல்காட்சி, அவர் வெளியிட்ட இன்ஸ்டா ரீல்களும் அவரை தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் கொண்டு போய் சேர்த்தது. ஒரு படத்திலாவது அந்த கயாடுவுடன் டூயட் பாட வேண்டும் என்று பல இளம், நடுத்தர வயது ஹீரோக்கள் துடித்தார்கள்.
சிம்புவுடன் ஒரு படம், தனுசுடன் ஒரு படம் என அவரும் பிஸியானார். ஆனால், யார் கண் பட்டதோ, தமிழகத்தில் நடந்த சினிமா துறையினர் மீதான அமலாக்கத்துறை ரெய்டு, அதை தொடர்ந்து வெளியான பார்ட்டி செய்திகள், கயாடு 35 லட்சம் மதிப்புள்ள பேக்கை பரிசாக பெற்றார் என கிளம்பிய செய்திகள், அவருக்கு நெகட்டிவ் ஆக அமைந்தன.
அதனால், கயாடுக்கு ஏகப்பட்ட கெட்ட பெயர். அவர் குறித்து விசாரித்தால், இப்போது சென்னையில் நேரத்தை செலவழிக்கவே அவருக்கு மனமில்லை. ஐதராபாத், கேரளாவில் இருக்கிறாராம். தமிழ் சினிமா, தமிழ் ரசிகர்கள் தன்னை புறக்கணிப்பதாக பீல் பண்ணுகிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
உண்மையில் அப்படிப்பட்ட காஸ்ட்லி பேக்கை அவர் பரிசாக பெற்றாரா? இல்லையா என்பதை அவர் வாய் திறந்து சொன்னால்தான், அவர் வாய்ப்புகளுக்கு கதவு திறக்கும் என்றும் கூறப்படுகிறது.




