'ஜனநாயகன், டாக்சிக்' : அடுத்தடுத்த சர்ச்சையில் தயாரிப்பு நிறுவனம் | அவதூறு பரப்பும் விஜய் ரசிகர்கள்! - சாடிய இயக்குனர் சுதா கொங்கரா | அல்லு அர்ஜூனின் 23வது படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்; அறிவிப்பு வெளியானது | பராசக்தி என் நடிப்புக்கான முழுமையான அங்கீகாரத்தை கொடுத்து விட்டது! -ஸ்ரீ லீலா வெளியிட்ட தகவல் | தனுஷ் 54வது படத்தின் புதிய அப்டேட்: நாளை பொங்கல் தினத்தில் வெளியாகிறது! | பொங்கல் பண்டிகையை தித்திப்பாக்கும்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | மீண்டும் இணைந்த 'தகராறு' கூட்டணி! | சம்மர் 2026ல் ரிலீஸ்: உறுதிப்படுத்திய அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் படம்! | 2 நாட்களில் ரூ.120 கோடி வசூலைக் கடந்த 'மன ஷங்கர வர பிரசாத் காரு' படம் | தமிழில் பேச முயற்சிக்கும் ஸ்ரீலீலா |

ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்து வெளிவந்த தெலுங்குப் படம் 'ஆர்ஆர்ஆர்'. அப்படத்தில் கீரவாணி இசையில், ராகுல் சிப்லிகுன்ச் பாடிய 'நாட்டு நாட்டு' பாடல் அந்த ஆண்டிற்கான சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருது பெற்றது.
தெலுங்கு சினிமா பாடல் ஒன்று ஆஸ்கர் விருது பெற்றதை அத்திரையுலகினர் கொண்டாடினார். ஆனால், அப்போது இருந்த அரசு அந்த விருதைப் பெற்றவர்களை கவுரவிக்கவில்லை. அந்த சமயத்தில் எதிர்க்கட்சியாக இருந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரேவந்த் ரெட்டி 10 லட்ச ரூபாய் பரிசுத் தொகையை அறிவித்தார். அதோடு காங்கிரஸ் பதவிக்கு வந்தால் அவருக்கு ரூ.1 கோடி பரிசாக வழங்கப்படும என்று அறிவித்தார்.
இருந்தாலும் அது பற்றி எந்த அறிவிப்பும் வராமல் இருந்தது. இதனிடையே, சமீபத்தில் தெலுங்கு சினிமாவுக்கான 'கட்டார் விருதுகள்' வழங்கும் விழாவில் இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு துணை முதல்வரை கேட்டுக் கொண்டார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற போனலு திருவிழா நிகழ்வில் ஆந்திர முதல்வர் ரேவந்த் ரெட்டி, பாடகர் ராகுலுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். நிறைய இளைஞர்களுக்கு அவர் முன்னுதாரணமாக இருக்கிறார் என்றும் பாராட்டியுள்ளார்.