அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்து வெளிவந்த தெலுங்குப் படம் 'ஆர்ஆர்ஆர்'. அப்படத்தில் கீரவாணி இசையில், ராகுல் சிப்லிகுன்ச் பாடிய 'நாட்டு நாட்டு' பாடல் அந்த ஆண்டிற்கான சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருது பெற்றது.
தெலுங்கு சினிமா பாடல் ஒன்று ஆஸ்கர் விருது பெற்றதை அத்திரையுலகினர் கொண்டாடினார். ஆனால், அப்போது இருந்த அரசு அந்த விருதைப் பெற்றவர்களை கவுரவிக்கவில்லை. அந்த சமயத்தில் எதிர்க்கட்சியாக இருந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரேவந்த் ரெட்டி 10 லட்ச ரூபாய் பரிசுத் தொகையை அறிவித்தார். அதோடு காங்கிரஸ் பதவிக்கு வந்தால் அவருக்கு ரூ.1 கோடி பரிசாக வழங்கப்படும என்று அறிவித்தார்.
இருந்தாலும் அது பற்றி எந்த அறிவிப்பும் வராமல் இருந்தது. இதனிடையே, சமீபத்தில் தெலுங்கு சினிமாவுக்கான 'கட்டார் விருதுகள்' வழங்கும் விழாவில் இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு துணை முதல்வரை கேட்டுக் கொண்டார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற போனலு திருவிழா நிகழ்வில் ஆந்திர முதல்வர் ரேவந்த் ரெட்டி, பாடகர் ராகுலுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். நிறைய இளைஞர்களுக்கு அவர் முன்னுதாரணமாக இருக்கிறார் என்றும் பாராட்டியுள்ளார்.