ரத்தம் தெறிக்கும் டிசி படத்தின் டிரைலர் | கருப்பு படத்தில் முதல்வர் விஜய்க்கு நன்றி கார்டு | பூஜா ஹெக்டேவின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் முதல் படம் | முதல் நாளே 10 கோடி வசூலை தாண்டிய ‛அதிரடி' திரைப்படம் | துரந்தர் 2 : ஓயே ஓயே பாடலுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு | முதல்வர் விஜயை சந்தித்து கமல் வைத்த 6 கோரிக்கை | இந்நாள் முதல்வரையும், முன்னாள் முதல்வரையும் அடுத்தடுத்து சந்தித்த நாசர் | சம்பளம் பற்றி வெளிப்படையாகச் சொன்ன சனம் ஷெட்டி | கருப்பு : முதல் நாள் வசூல் எவ்வளவு ? | துரந்தர் 2 : ஓடிடி வெளியீடு இரண்டு வாரம் தள்ளி வைப்பு |

தெலுங்கு திரை உலகில் வில்லன் நடிகராக பிரபலமாகி பின்னர் கதையின் நாயகனாக தொடர்ந்து நடித்து வருபவர் ராணா டகுபதி. அடிப்படையில் இவரது தந்தை தயாரிப்பாளர் என்பதால் இன்னொரு பக்கம் தயாரிப்பு பணிகளையும் கவனித்து வருகிறார். அந்த வகையில் தற்போது துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் காந்தா திரைப்படத்தை துல்கர் சல்மானுடன் இணைந்து தயாரித்து வருகிறார் ராணா. பீரியட் படமாக உருவாகும் இதை செல்வமணி செல்வராஜ் என்பவர் இயக்குகிறார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் ராணா கூறும்போது, “ஒவ்வொரு கதையும் அதற்கான நடிகர்களை ஏதோ ஒரு விதத்தில் தேடிக் கொள்ளும். குறிப்பிட்ட ஒரு கதாபாத்திரத்திற்கு பலரும் சரியாக இருப்பார்கள் தான் என்றாலும் ஒரு தயாரிப்பாளராக நான் இந்த படத்திற்கு சரியான நடிகராக தேடிய போது துல்கர் சல்மானை தவிர என்னால் வேறு யாரையும் நினைத்துப் முடியவில்லை. ஒருவேளை அவர் இந்த படத்திற்கு கிடைத்திருக்காவிட்டால் இந்த படத்தை தயாரித்திருக்கவே மாட்டேன். அந்த அளவுக்கு துல்கர் சல்மான், தான் தேர்ந்தெடுக்கும் கதை மற்றும் கதாபாத்திரங்கள் மூலம் ஒரு அழகியலான சினிமாவை ரசிகர்களிடம் கொண்டு செல்கிறார் என்றே நினைக்கிறேன்” என்று பாராட்டியுள்ளார்.