ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' | நான் ஈ படத்தை இயக்கியது ஏன்? : மனம் திறந்த ராஜமவுலி | மோகன்லாலுக்கு இழைக்கப்பட்ட அநீதி : நடிகர் ரவீந்தர் கொதிப்பு | துல்கர் சல்மான் இல்லையென்றால் படத்தையே நிறுத்தி இருப்பேன் : ராணா டகுபதி | சவுபின் சாஹிர் கால்ஷீட் கிடைக்காததால் மாறிய பஹத் பாசில் கதாபாத்திரம் |
தெலுங்கு திரை உலகில் வில்லன் நடிகராக பிரபலமாகி பின்னர் கதையின் நாயகனாக தொடர்ந்து நடித்து வருபவர் ராணா டகுபதி. அடிப்படையில் இவரது தந்தை தயாரிப்பாளர் என்பதால் இன்னொரு பக்கம் தயாரிப்பு பணிகளையும் கவனித்து வருகிறார். அந்த வகையில் தற்போது துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் காந்தா திரைப்படத்தை துல்கர் சல்மானுடன் இணைந்து தயாரித்து வருகிறார் ராணா. பீரியட் படமாக உருவாகும் இதை செல்வமணி செல்வராஜ் என்பவர் இயக்குகிறார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் ராணா கூறும்போது, “ஒவ்வொரு கதையும் அதற்கான நடிகர்களை ஏதோ ஒரு விதத்தில் தேடிக் கொள்ளும். குறிப்பிட்ட ஒரு கதாபாத்திரத்திற்கு பலரும் சரியாக இருப்பார்கள் தான் என்றாலும் ஒரு தயாரிப்பாளராக நான் இந்த படத்திற்கு சரியான நடிகராக தேடிய போது துல்கர் சல்மானை தவிர என்னால் வேறு யாரையும் நினைத்துப் முடியவில்லை. ஒருவேளை அவர் இந்த படத்திற்கு கிடைத்திருக்காவிட்டால் இந்த படத்தை தயாரித்திருக்கவே மாட்டேன். அந்த அளவுக்கு துல்கர் சல்மான், தான் தேர்ந்தெடுக்கும் கதை மற்றும் கதாபாத்திரங்கள் மூலம் ஒரு அழகியலான சினிமாவை ரசிகர்களிடம் கொண்டு செல்கிறார் என்றே நினைக்கிறேன்” என்று பாராட்டியுள்ளார்.