நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்தா...? | மாப்பிள்ளை அவர்தான் ஆனால்.. என்கிற பாணியில் நடிகை வழக்கில் கருத்து தெரிவிக்கும் மலையாள நட்சத்திரங்கள் | பெப்காவில் திலீப்பை சேர்க்க முயற்சி ; ராஜினாமா செய்த பெண் டப்பிங் கலைஞர் | தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு |

இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது ஹிந்தி, சைனீஸ் ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் திரிஷ்யம் 2 என்கிற பெயரில் வெளியாகி கொரோனா காலகட்டத்தில் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகி முதல் பாகத்திற்கு கிடைத்த அதே வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இந்த படத்திற்கு மூன்றாம் பாகம் இருக்கிறது என்றும் இந்த மூன்றாம் பாகத்தோடு இந்த தொடர் முடிகிறது என்றும் ஜீத்து ஜோசப் கூறி வந்தார்.
அதற்கேற்றபடி வரும் அக்டோபர் மாதம் இந்த படத்தின் மூன்றாம் பாகம் துவங்க இருக்கிறது. மலையாளத்தில் மட்டுமல்லாது ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கி ஒரே சமயத்தில் மூன்று படங்களையும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். தற்போது ஜீத்து ஜோசப் மிராஜ் மற்றும் வலது வசத்தே கள்ளன் என இரண்டு படங்களை ஒரே சமயத்தில் மாற்றி மாற்றி இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் தான் சமீபத்திய நிகழ்வு ஒன்று கலந்து கொண்டு அவர் பேசும்போது, “திரிஷ்யம் படத்தின் முழு ஸ்கிரிப்டையும் எழுதி முடித்து விட்டேன். அதிலும் கிளைமாக்ஸை எழுதுவது எனக்கு மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் அழுத்தத்தை தந்தது. இந்த இரண்டு படங்களின் வேலைகள் தொடர்ந்து இருந்ததால் தினசரி அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து இந்த படத்தின் ஸ்கிரிப்ட் மற்றும் கிளைமாக்ஸ் ஆகியவற்றை எழுதி முடித்தேன். வரும் அக்டோபரில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும்” என்று கூறியுள்ளார்.