Advertisement

சிறப்புச்செய்திகள்

ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' | நான் ஈ படத்தை இயக்கியது ஏன்? : மனம் திறந்த ராஜமவுலி | மோகன்லாலுக்கு இழைக்கப்பட்ட அநீதி : நடிகர் ரவீந்தர் கொதிப்பு | துல்கர் சல்மான் இல்லையென்றால் படத்தையே நிறுத்தி இருப்பேன் : ராணா டகுபதி | சவுபின் சாஹிர் கால்ஷீட் கிடைக்காததால் மாறிய பஹத் பாசில் கதாபாத்திரம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தினமும் அதிகாலை 3 மணிக்கு திரிஷ்யம் 3 கிளைமாக்ஸை எழுதினேன் : ஜீத்து ஜோசப்

19 ஜூலை, 2025 - 01:12 IST
எழுத்தின் அளவு:
I-wrote-the-climax-of-Drishyam-at-3-am-every-morning-Jeethu-Joseph
Advertisement

இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது ஹிந்தி, சைனீஸ் ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் திரிஷ்யம் 2 என்கிற பெயரில் வெளியாகி கொரோனா காலகட்டத்தில் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகி முதல் பாகத்திற்கு கிடைத்த அதே வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இந்த படத்திற்கு மூன்றாம் பாகம் இருக்கிறது என்றும் இந்த மூன்றாம் பாகத்தோடு இந்த தொடர் முடிகிறது என்றும் ஜீத்து ஜோசப் கூறி வந்தார்.

அதற்கேற்றபடி வரும் அக்டோபர் மாதம் இந்த படத்தின் மூன்றாம் பாகம் துவங்க இருக்கிறது. மலையாளத்தில் மட்டுமல்லாது ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கி ஒரே சமயத்தில் மூன்று படங்களையும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். தற்போது ஜீத்து ஜோசப் மிராஜ் மற்றும் வலது வசத்தே கள்ளன் என இரண்டு படங்களை ஒரே சமயத்தில் மாற்றி மாற்றி இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் தான் சமீபத்திய நிகழ்வு ஒன்று கலந்து கொண்டு அவர் பேசும்போது, “திரிஷ்யம் படத்தின் முழு ஸ்கிரிப்டையும் எழுதி முடித்து விட்டேன். அதிலும் கிளைமாக்ஸை எழுதுவது எனக்கு மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் அழுத்தத்தை தந்தது. இந்த இரண்டு படங்களின் வேலைகள் தொடர்ந்து இருந்ததால் தினசரி அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து இந்த படத்தின் ஸ்கிரிப்ட் மற்றும் கிளைமாக்ஸ் ஆகியவற்றை எழுதி முடித்தேன். வரும் அக்டோபரில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும்” என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நரேன் கார்த்திகேயன் பற்றிய பயோபிக் சினிமாவாகிறதுநரேன் கார்த்திகேயன் பற்றிய பயோபிக் ... துல்கர் சல்மான் இல்லையென்றால் படத்தையே நிறுத்தி இருப்பேன் : ராணா டகுபதி துல்கர் சல்மான் இல்லையென்றால் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in