'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு | உஸ்தாத் பகத்சிங் : ரூ.100 கோடி மேல் நஷ்டம் வருமா? | ஒரே நாளில் தெலுங்கில் வெளியாகும் இரண்டு தமிழ்ப் படங்கள் |

கடந்த 2014ல் தெலுங்கில் இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் நானி, சமந்தா நடிப்பில் ஈகா (தமிழில் நான் ஈ) திரைப்படம் வெளியானது. இறந்து போன கதாநாயகன் ஈ வடிவத்தில் வந்து தன்னைக் கொன்ற வில்லனை பழிவாங்குவது போல வித்தியாசமான கோணத்தில் உருவாக்கப்பட்ட இந்த கதை மிக பிரம்மாண்டமான விஎப்எக்ஸ் காட்சிகளுடன் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
சமீபத்தில் ஜெனிலியா நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ஜூனியர் என்கிற படத்தில் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜமவுலி பேசும்போது, ஈகா திரைப்படம் எனது சிறந்த படம் என்று கூறியுள்ளார்.
இது பற்றி அந்த விழாவில் ராஜமவுலி கூறும்போது, “ஜூனியர் என்டிஆர் நடிப்பில் என்னுடைய சிம்மாதிரி படம் வெளியான பிறகு அதுபோன்ற கமர்சியல் படங்களை இயக்குவதற்கு தான் நான் லாயக்கு என்பது போல ஒரு பேச்சு எழுந்தது. அதனை மாற்றும் விதமாகத்தான் ஈகா படத்தை உருவாக்கினேன்” என்று கூறியுள்ளார்.




