ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் | 10 மில்லியன் வியூஸ் - தமன்னா சாதனையை முறியடிப்பாரா பூஜா ஹெக்டே | விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா | தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் |
அஞ்சலியின் 50வது படம் ஈகை. அவருடன் சந்தோஷ் பிரதாப், பாரதிராஜா , சுனில், பொன்வண்ணன், ஆர்.சுந்தர்ராஜன், 'விருமாண்டி' அபிராமி, புகழ் உள்பட பலர் நடிக்கிறார்கள். அறிமுக இயக்குனர் அசோக் வேலாயுதம் இயக்குகிறார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார், தருண் குமார் இசை அமைக்கிறார்.
படம் பற்றி அவர் கூறியிருப்பதாவது: சாதிக்க துடிக்கிற ஒரு இளம் பெண்ணின் போராட்டம்தான் படத்தின் கதை. நயன்தாராவிற்கு 'அறம்' படம் அமைந்தது போல அஞ்சலிக்கு இந்த படம் அமையும். மும்பையில் இருந்து சட்டம் படிக்க சென்னை வரும் அவருக்கு இங்கு ஒரு பிரச்னை அதனை அவர் எப்படி கையாள்கிறார் என்பதுதான் படத்தின் கதை. நம் கண்ணுக்கு தெரியாத எத்தனையோ புரட்சி பெண்கள் இருக்கிறார்கள் அவர்களில் ஒருத்தியின் கதை இது.
நாம் கடந்து செல்லும் எளிய மனிதனுக்குள்ளும் ஒரு பெரிய வாழ்க்கை புதைந்திருக்கும். அப்படி ஒரு வாழ்க்கையையும் இந்தக் கதை பேசும். அதைப் போல சிலர் நூறு வருஷம் வாழ்ந்திருப்பார்கள். ஆனாலும் அவர்கள் வாழ்க்கையில் மாற்றமோ, முன்னேற்றமோ நிகழ்ந்திருக்காது. அப்படிப்பட்டவர்களின் வாழ்க்கைக்கும் தீர்வு சொல்கிற படமாகவும் இருக்கும். என்றார்.