ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
அஞ்சலியின் 50வது படம் ஈகை. அவருடன் சந்தோஷ் பிரதாப், பாரதிராஜா , சுனில், பொன்வண்ணன், ஆர்.சுந்தர்ராஜன், 'விருமாண்டி' அபிராமி, புகழ் உள்பட பலர் நடிக்கிறார்கள். அறிமுக இயக்குனர் அசோக் வேலாயுதம் இயக்குகிறார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார், தருண் குமார் இசை அமைக்கிறார்.
படம் பற்றி அவர் கூறியிருப்பதாவது: சாதிக்க துடிக்கிற ஒரு இளம் பெண்ணின் போராட்டம்தான் படத்தின் கதை. நயன்தாராவிற்கு 'அறம்' படம் அமைந்தது போல அஞ்சலிக்கு இந்த படம் அமையும். மும்பையில் இருந்து சட்டம் படிக்க சென்னை வரும் அவருக்கு இங்கு ஒரு பிரச்னை அதனை அவர் எப்படி கையாள்கிறார் என்பதுதான் படத்தின் கதை. நம் கண்ணுக்கு தெரியாத எத்தனையோ புரட்சி பெண்கள் இருக்கிறார்கள் அவர்களில் ஒருத்தியின் கதை இது.
நாம் கடந்து செல்லும் எளிய மனிதனுக்குள்ளும் ஒரு பெரிய வாழ்க்கை புதைந்திருக்கும். அப்படி ஒரு வாழ்க்கையையும் இந்தக் கதை பேசும். அதைப் போல சிலர் நூறு வருஷம் வாழ்ந்திருப்பார்கள். ஆனாலும் அவர்கள் வாழ்க்கையில் மாற்றமோ, முன்னேற்றமோ நிகழ்ந்திருக்காது. அப்படிப்பட்டவர்களின் வாழ்க்கைக்கும் தீர்வு சொல்கிற படமாகவும் இருக்கும். என்றார்.