வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் |

ஹனிப் அதேனி இயக்கத்தில் உன்னி முகுந்தன், சித்திக், ஜெகதீஷ் உள்ளிட்டோர் நடித்து கடந்தாண்டில் வெளியான மலையாளப் படம் 'மார்க்கோ'. அதிகமான வன்முறைக் காட்சிகள் இருந்ததால் இந்த படத்தை பலரும் விமர்சித்தனர். ஆனாலும் இப்படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
மார்கோ இரண்டாம் பாகம் உருவாவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் மார்கோ இரண்டாம் பாகம் குறித்து உன்னி முகுந்தனுக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் அளித்த பதிலில், ‛‛மார்கோ 2ம் பாகம் உருவாகவில்லை. அந்த படத்தை சுற்றி ஏகப்பட்ட நெகட்டிவ் ஆன சூழல் நிலவியதால் இந்த படத்தை கை விடுகிறோம். ஆனால், மார்கோ 2 படத்தை விட வேறொரு சிறந்த படத்தை கொடுக்க விரும்புகிறேன். அது பெரிய படமாக, நல்ல படமாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.