ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

1960களில் தமிழ் சினிமாவிலும், நாடக உலகிலும் சமூக கதைகள் வரத் தொடங்கி விட்டது. ஆனால் கன்னட சினிமாவிலும், நாடகத்திலும் புராண கதையே அதிக இடம் பிடித்துக் கொண்டிருந்தது. இந்த காலகட்டத்தில்தான் கிரிஷ் கர்னாட், கன்னட நாடக துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தினார். இத்தனைக்கும் அவர் கன்னடர் அல்ல. மகாராஷ்டிரத்தை சேர்ந்தவர்.
கர்நாடக பல்கலைகழத்தில் படித்தபோது கன்னட கலாச்சாரம் பிடித்து விடவே அங்கேயே தங்கி விட்டார். பின்னர், லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழத்தில் முதுகலை படித்தாலும் கலைமீதுதான் ஆர்வம்.
தனது 23வது வயதில் 'யயாதி' என்ற நாடகத்தை அரங்கேற்றினார், இது மகாபாரத கதாபாத்திரங்களை அடிப்படையாக கொண்ட சமூக கதை. நாடகத்திற்கு பிறகு குறும்படங்கள், சுயாதீன படங்களில் பணியாற்றியவர் பின்னர் சினிமாவிற்கு வந்தார்.
நாடகத்தை கைவிடாமல் இருக்க மெட்ராஸ் பிளேயர்ஸ் என்ற நாடக அமைப்பு தொடங்கி அதன் மூலம் நாடகங்களை நடத்தி வந்தார். வெறும் கலைஞராக மட்டுமில்லாமல் சமூகத்திற்காக பல போராட்டங்களையும் முன்னெடுத்தார். மத்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளை பெற்றார். பல பல்கலைக் கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்கி உள்ளது.
தமிழில் நான் அடிமை இல்லை, குணா, காதலன், ரட்சகன், காதல் மன்னன், ஹேராம், செல்லமே, அமிர்தம், 24 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
அவரது 6வது நினைவு தினம் இன்று.