வட அமெரிக்காவில் கல்கி 2898 ஏடி படத்தின் வசூல் சாதனையை முறியடித்த துரந்தர் 2 | அண்ணன் வாரிசுகளின் பட பூஜைக்கு வந்து வாழ்த்திய பவன் கல்யாண் | முன்னணி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு ‛ரெய்னா' : அர்த்தம் தெரியுமா? | இது எனக்கு புது உலகம் : முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் சம்யுக்தா | சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ் | சினிமாக்காரர்களுக்கு ஞாயிறு கட்டாயம் விடுமுறை வேண்டும் : நிவின்பாலி வலியுறுத்தல் | சிபிஐ 6ம் பாகம் வருகிறது : இயக்குனர் மது தகவல் | தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்வாரா வடிவேலு | விரைவில் யூத் பட வெற்றி விழா | நிறையபேர் கைலாசம் போயிட்டாங்க, ரஞ்சிதா கைலாச போயிட்டாங்க : கஸ்தூரி |

என்.டி.ராமராவ் என்றாலே அவர் நடித்த புராண படங்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால் அவர் பல படங்களை இயக்கி உள்ளார், பல படங்களுக்கு கதை மற்றும் திரைக்கதையும் எழுதியுள்ளார்.
'சீத்தாராம கல்யாணம்' என்ற படத்தை முதன் முறையாக 1961ம் ஆண்டு இயக்கினார். அதற்பிறகு 20 படங்கள் வரை இயக்கினார். அவைகள் பெரும்பாலும் புராண மற்றும் சரித்திர கதைகள். 1966ம் ஆண்டு 'ஸ்ரீகிருஷ்ண பாண்டேவியாம்' என்ற படத்திற்கு திரைக்கதை எழுதினார். அதன்பிறகு 19 படங்களுக்கு திரைக்கதை எழுதினார். 1967ம் ஆண்டு 'உம்மடி குடும்பம்' என்ற படத்திற்கு கதை எழுதினார். அதை தொடர்ந்து 13 படங்களுக்கு கதை எழுதினார். தமிழில் 'கண்ணன் கருணை' என்ற படத்திற்கும் சிவாஜி நடித்த 'சரித்திர நாயகன்' படத்திற்கு கதை எழுதினார், அந்த படத்தை அவரே தயாரிக்கவும் செய்தார்.