ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
காரைக்குடியில் இருந்த ஏவிஎம் ஸ்டூடியோவை மெய்யப்ப செட்டியார் சென்னைக்கு மாற்றினார். புதிய ஸ்டூடியோவில் தயாராகும் முதல் படத்தை தானே இயக்க விரும்பினார். அப்போது அவர் பா.நீலகண்டன் எழுதிய ஒரு கதையை அங்கீகரித்து அவரையே இயக்க வைக்கலாம் என்று முடிவு செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் தானே அந்த படத்தை இயக்கினார். அந்த படம் 'வாழ்க்கை'.
1939ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படமான 'பேச்சிலர் மதர்' . அதை தழுவி உருவான ஹிந்தி திரைப்படமான குன்வாரா பாப் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவானது. காதலன் ஏமாற்றி விட்டதால் அவன் மூலம் பிறந்த குழந்தையை பணக்கார பெண்ணான நாயகியின் காரில் அநாதையாக விட்டுச் செல்கிறாள் ஒரு பெண். அந்த குழந்தையை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் நாயகிக்கு என்னவெல்லாம் நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
வைஜெயந்திமாலா, டி.ஆர்.ராமச்சந்திரன், கே.சாரங்கபாணி, எஸ்.வி.சஹஸ்ரநாமம், எம்.எஸ்.திரௌபதி, குளத்து மணி, சுப்பையா, பி.டி.சம்பந்தம், வி.எம்.ஏழுமலை, கே.என்.கமலம், எஸ்.ஆர்.ஜானகி உள்பட பலர் நடித்தனர். ஆர்.சுப்பாராமன் இசை அமைத்திருந்தார்.
இந்த படம் 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது, ஒரு வருடத்திற்கு பிறகு கேவா கலருக்கு மாற்றப்பட்டு வெளியானது. 'ஜீவிதம்' என்ற பெயரில் தெலுங்கிலும், 'பாஹர்' என்ற பெயரில் ஹிந்தியிலும் ரீ மேக் ஆனது. வைஜயந்திமாலா இந்த படத்தின் மூலம் புகழ்பெற்றார்.