நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

கமல்ஹாசன் நடித்துள்ள 'தக் லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் பேசிய கமல், தமிழில் இருந்து கன்னடம் பிறந்ததாக கூறினார். அவரது இந்த பேச்சு, கர்நாடக மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு எதிராக முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். கன்னட அமைப்பினர், எழுத்தாளர்கள் போராட்டம் நடத்தினர். தனது பேச்சுக்காக கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கன்னட அமைப்புகள் கோரி வருகின்றன. ஆனால் 'அன்பின் மிகுதிக்கு மன்னிப்பு கேட்க முடியாது' என்று கமல் கூறிவிட்டார்.
இந்த நிலையில் கன்னட சினிமா வா்த்தக சபை (சேம்பர்) நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. தலைவர் நரசிம்மலு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தயாரிப்பாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் கன்னடம் குறித்த நடிகர் கமல்ஹாசன் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் கர்நாடகத்தில் அவர் நடித்துள்ள 'தக் லைப்' படத்தை திரையிட தடை விதிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.