கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
பாரதிராஜா சினிமா வாய்ப்புகள் தேடிக் கொண்டிருந்தபோது அவர் ஜெயலலிதாவை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்று நினைத்தார். இதற்காக ஆர்.செல்வராஜ் எழுதிய சொந்த வீடு என்று கதையை வைத்திருந்தார். அதை ஜெயலலிதாவிடம் கூறி ஒப்புதலும் வாங்கி வைத்திருந்தார். மதிக்காத கணவனை எதிர்த்து ஜெயிக்கும் ஒரு பெண்ணின் கதை இது. இதில் கணவனாக முத்துராமனும், புரட்சிக்கார மனைவியாக ஜெயலலிதாவும் நடிப்பதாக இருந்தது. ஆனால் இந்த திட்டம் ஏனோ கைவிடப்பட்டது.
பாரதிராஜவை வைத்து ஒரு படம் தயாரிக்க ஏவிஎம் விரும்பியது. பல வருடங்களுக்கு பிறகு இது கைகூடியது. ஜெயலலிதாவிற்காக வைத்திருந்த கதையை 'புதுமைப்பெண்' என்ற பெயரில் ஏவிஎம்மிற்காக இயக்கினார். இதில் ஜெயலலிதா நடிப்பதாக இருந்த கேரக்டரில் ரேவதி நடித்தார். முத்துராமன் நடிக்க இருந்த கேரக்டரில் பாண்டியன் நடித்தார்.
பொதுவாக ஏவிஎம் தயாரிக்கும் படங்களின் தலைப்புக்கு முன்னால் 'ஏவிஎம்மின்' என்ற சொல் இடம்பெறும், பாரதிராஜா தான் இயக்கும் படங்களின் தலைப்புக்கு முன்னால் 'பாரதிராஜாவின்' என்று குறிப்பிடுவார். இந்த படத்திற்கு யார் பெயரை போட்டுக் கொள்வது என்ற பிரச்னை வந்தபோது ஏவிஎம் படைப்பாளியை மதித்து 'பாரதிராஜாவின் கைவண்ணத்தில் ஏவிஎம்மின் புதுமைப்பெண்' என படத் தலைப்பை வெளியிட்டது.