ஆன்மிகப் படங்களை நோக்கி நகரும் தமிழ், தெலுங்கு சினிமா | தெலுங்கில் சர்வானந்த் ஜோடியாக நடிக்கும் ருக்மணி வசந்த் | சயின்ஸ் பிக்சன் படத்திற்காக 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த குஞ்சாக்கோ-மஞ்சு வாரியர் | தனக்கு விருது வாங்கித் தந்த படத்தை 4 வருடமாகியும் பார்க்கத் தயங்கும் ரேவதி | அறிமுகப் படம் வெளியாகும் முன்பே அடுத்த வாய்ப்பு பெற்ற சிவகுமார் முருகேசன் | 134 படங்களின் பாடல்களை இளையராஜா பயன்படுத்த தடை | மோகன்லால் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பிரியதர்ஷன் | சிரஞ்சீவிக்கு முதல் திருமண அழைப்பிதழ் வைத்த அல்லு சிரிஷ் | 10 நாட்களில் ரூ.25 கோடி வசூலைக் கடந்த ‛வித் லவ்' | மரகதநாணயம் 2 படம் தொடங்கியது |

பாரதிராஜா சினிமா வாய்ப்புகள் தேடிக் கொண்டிருந்தபோது அவர் ஜெயலலிதாவை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்று நினைத்தார். இதற்காக ஆர்.செல்வராஜ் எழுதிய சொந்த வீடு என்று கதையை வைத்திருந்தார். அதை ஜெயலலிதாவிடம் கூறி ஒப்புதலும் வாங்கி வைத்திருந்தார். மதிக்காத கணவனை எதிர்த்து ஜெயிக்கும் ஒரு பெண்ணின் கதை இது. இதில் கணவனாக முத்துராமனும், புரட்சிக்கார மனைவியாக ஜெயலலிதாவும் நடிப்பதாக இருந்தது. ஆனால் இந்த திட்டம் ஏனோ கைவிடப்பட்டது.
பாரதிராஜவை வைத்து ஒரு படம் தயாரிக்க ஏவிஎம் விரும்பியது. பல வருடங்களுக்கு பிறகு இது கைகூடியது. ஜெயலலிதாவிற்காக வைத்திருந்த கதையை 'புதுமைப்பெண்' என்ற பெயரில் ஏவிஎம்மிற்காக இயக்கினார். இதில் ஜெயலலிதா நடிப்பதாக இருந்த கேரக்டரில் ரேவதி நடித்தார். முத்துராமன் நடிக்க இருந்த கேரக்டரில் பாண்டியன் நடித்தார்.
பொதுவாக ஏவிஎம் தயாரிக்கும் படங்களின் தலைப்புக்கு முன்னால் 'ஏவிஎம்மின்' என்ற சொல் இடம்பெறும், பாரதிராஜா தான் இயக்கும் படங்களின் தலைப்புக்கு முன்னால் 'பாரதிராஜாவின்' என்று குறிப்பிடுவார். இந்த படத்திற்கு யார் பெயரை போட்டுக் கொள்வது என்ற பிரச்னை வந்தபோது ஏவிஎம் படைப்பாளியை மதித்து 'பாரதிராஜாவின் கைவண்ணத்தில் ஏவிஎம்மின் புதுமைப்பெண்' என படத் தலைப்பை வெளியிட்டது.




