தனக்காக கட்டிய கல்லறையில் நடிகர் ராஜேஷ் உடல் அடக்கம் | தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குனர் மீது நடிகை சுர்வீன் சாவ்லா குற்றச்சாட்டு | ஒரு வழியாக வெளியானது 'லால் சலாம்' ஓடிடி அறிவிப்பு? | தெலுங்கானா முதல்வரை சந்தித்து அழைப்பிதழ் தந்த நாகார்ஜுனா, அமலா | சின்மயி Vs தீ, தேவையற்ற சர்ச்சை - மணிரத்னம் கோபம் ? | சிறுமிகளின் ரீல்ஸ்களை த்ரிஷா ஷேர் செய்தது சரியா ? | பிளாஷ்பேக்: 'வேலைக்காரி'யின் சாதனைகள் | திருமலைக்குமாரசாமி கோவிலில் மோகன்லால் தங்க வேல் செலுத்தி தரிசனம் | அல்லு அர்ஜூனுக்கு கத்தார் அரசு விருது | கமல்ஹாசனை பயன்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது : நடிகர் சங்கம் அறிக்கை |
பாரதிராஜா சினிமா வாய்ப்புகள் தேடிக் கொண்டிருந்தபோது அவர் ஜெயலலிதாவை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்று நினைத்தார். இதற்காக ஆர்.செல்வராஜ் எழுதிய சொந்த வீடு என்று கதையை வைத்திருந்தார். அதை ஜெயலலிதாவிடம் கூறி ஒப்புதலும் வாங்கி வைத்திருந்தார். மதிக்காத கணவனை எதிர்த்து ஜெயிக்கும் ஒரு பெண்ணின் கதை இது. இதில் கணவனாக முத்துராமனும், புரட்சிக்கார மனைவியாக ஜெயலலிதாவும் நடிப்பதாக இருந்தது. ஆனால் இந்த திட்டம் ஏனோ கைவிடப்பட்டது.
பாரதிராஜவை வைத்து ஒரு படம் தயாரிக்க ஏவிஎம் விரும்பியது. பல வருடங்களுக்கு பிறகு இது கைகூடியது. ஜெயலலிதாவிற்காக வைத்திருந்த கதையை 'புதுமைப்பெண்' என்ற பெயரில் ஏவிஎம்மிற்காக இயக்கினார். இதில் ஜெயலலிதா நடிப்பதாக இருந்த கேரக்டரில் ரேவதி நடித்தார். முத்துராமன் நடிக்க இருந்த கேரக்டரில் பாண்டியன் நடித்தார்.
பொதுவாக ஏவிஎம் தயாரிக்கும் படங்களின் தலைப்புக்கு முன்னால் 'ஏவிஎம்மின்' என்ற சொல் இடம்பெறும், பாரதிராஜா தான் இயக்கும் படங்களின் தலைப்புக்கு முன்னால் 'பாரதிராஜாவின்' என்று குறிப்பிடுவார். இந்த படத்திற்கு யார் பெயரை போட்டுக் கொள்வது என்ற பிரச்னை வந்தபோது ஏவிஎம் படைப்பாளியை மதித்து 'பாரதிராஜாவின் கைவண்ணத்தில் ஏவிஎம்மின் புதுமைப்பெண்' என படத் தலைப்பை வெளியிட்டது.