ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? | தோத்துகிட்டேபோனா எப்படி : எப்பதான் ஜெயிக்கிறது | தாத்தா பெயரை காப்பாற்றுவேன்: நாகேஷ் பேரன் உருக்கம் | எனது முத்தக் காட்சியை எப்படி நீக்கலாம் : பாலிவுட் நடிகை கண்டனம் | ரஞ்சித், ஆர்யா படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மரணம் | ஆள் வச்சி அடிச்ச மாதிரி டார்ச்சர் இருந்தது: 'தலைவன் தலைவி' படப்பிடிப்பு அனுபவம் குறித்து விஜய் சேதுபதி |
தெலுங்கு முன்னணி நடிகரான பவன் கல்யாண் கடந்த சில வருடங்களாகவே ஒரு பக்கம் சினிமாவிலும் இன்னொரு பக்கம் அதே அளவு தீவிர அரசியலிலும் கவனம் செலுத்தி வந்தார். இதனால் அவரது படங்களின் படப்பிடிப்புகள், குறித்த நேரத்தில் நடைபெறாமல் ரிலீஸிலும் தாமதம் ஏற்பட்டது. அந்த வகையில் ஹரிஹர வீரமல்லு மற்றும் ஓஜி ஆகிய படங்கள் நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்தன. கடந்த வருடம் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆந்திராவின் துணை முதல்வராக பொறுப்பேற்ற பவன் கல்யாண், அதன்பிறகு இந்த இரண்டு படங்களையும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நடித்துக் கொடுத்து வருகிறார்.. அந்த வகையில் சமீபத்தில் தான் 'ஹரிஹர வீர மல்லு' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
இதைத்தொடர்ந்து ஓஜி படத்தின் படப்பிடிப்பிலும் அவ்வப்போது கலந்து கொண்டு நடித்து வந்தார். இந்த படத்தில் பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஸ்மியின் வில்லனாக நடித்து வருகிறார். கடந்த சில தினங்களாகவே அவர் உடல்நிலை சரியில்லாமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அவருக்கு பரிசோதனை செய்தபோது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து 'ஓஜி' படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இம்ரான் ஹாஸ்மி குணமடைந்து திரும்பிய பின்னர் மீண்டும் படப்பிடிப்பு துவங்கும் என்று தெரிகிறது.