பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சினிமாவில் பொறுமை அவசியம் ; நல்ல படங்களுக்காக காத்திருக்கிறேன்... : புதுமுகம் ஜீவிதா! | தம்பதிகளின் உறவுச் சிக்கலை பேசும் ‛மதர்' | சிங்கப்பூரில் மறு தணிக்கை செய்யப்பட்ட 'கூலி' |
பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நடித்து சில நாட்களுக்குப் முன்பு திரைக்கு வந்த படம் 'மாமன்'. இந்த படத்தை இன்னும் ரசிகர்களுக்கு கொண்டு சேர்ப்பதற்காக சூரி தமிழகத்தில் ஒரு சில முக்கியமான தியேட்டர்களை தேர்ந்தெடுத்து ரசிகர்களுடன் படத்தை பார்க்கிறார்.
அந்த வகையில் நேற்று 'மாமன்' படத்தை நெல்லையில் உள்ள பிரபலமான தியேட்டரில் சூரி ரசிகர்களுடன் படம் பார்த்து வெளிவரும் போது செய்தியாளர்களைச்
சந்தித்தார். அப்போது அவரிடம் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அழைப்பு வந்தால் நடிப்பீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சூரி கூறியதாவது, "இதுவரை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் கதை நல்லா இருக்கும் பட்சத்தில் எனக்கு சரியாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக வில்லன் கதாபாத்திரத்திலும் நடிப்பேன். பழைய இயக்குனர், புதிய இயக்குனர் என்று எந்தவொரு வித்தியாசமும் இல்லை. இன்றைக்கு புதிய இயக்குனர்கள் பல வெற்றி படங்களை தருகிறார்கள்" என தெரிவித்தார்.