ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நடித்து சில நாட்களுக்குப் முன்பு திரைக்கு வந்த படம் 'மாமன்'. இந்த படத்தை இன்னும் ரசிகர்களுக்கு கொண்டு சேர்ப்பதற்காக சூரி தமிழகத்தில் ஒரு சில முக்கியமான தியேட்டர்களை தேர்ந்தெடுத்து ரசிகர்களுடன் படத்தை பார்க்கிறார்.
அந்த வகையில் நேற்று 'மாமன்' படத்தை நெல்லையில் உள்ள பிரபலமான தியேட்டரில் சூரி ரசிகர்களுடன் படம் பார்த்து வெளிவரும் போது செய்தியாளர்களைச்
சந்தித்தார். அப்போது அவரிடம் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அழைப்பு வந்தால் நடிப்பீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சூரி கூறியதாவது, "இதுவரை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் கதை நல்லா இருக்கும் பட்சத்தில் எனக்கு சரியாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக வில்லன் கதாபாத்திரத்திலும் நடிப்பேன். பழைய இயக்குனர், புதிய இயக்குனர் என்று எந்தவொரு வித்தியாசமும் இல்லை. இன்றைக்கு புதிய இயக்குனர்கள் பல வெற்றி படங்களை தருகிறார்கள்" என தெரிவித்தார்.




