நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நடித்து சில நாட்களுக்குப் முன்பு திரைக்கு வந்த படம் 'மாமன்'. இந்த படத்தை இன்னும் ரசிகர்களுக்கு கொண்டு சேர்ப்பதற்காக சூரி தமிழகத்தில் ஒரு சில முக்கியமான தியேட்டர்களை தேர்ந்தெடுத்து ரசிகர்களுடன் படத்தை பார்க்கிறார்.
அந்த வகையில் நேற்று 'மாமன்' படத்தை நெல்லையில் உள்ள பிரபலமான தியேட்டரில் சூரி ரசிகர்களுடன் படம் பார்த்து வெளிவரும் போது செய்தியாளர்களைச்
சந்தித்தார். அப்போது அவரிடம் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அழைப்பு வந்தால் நடிப்பீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சூரி கூறியதாவது, "இதுவரை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் கதை நல்லா இருக்கும் பட்சத்தில் எனக்கு சரியாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக வில்லன் கதாபாத்திரத்திலும் நடிப்பேன். பழைய இயக்குனர், புதிய இயக்குனர் என்று எந்தவொரு வித்தியாசமும் இல்லை. இன்றைக்கு புதிய இயக்குனர்கள் பல வெற்றி படங்களை தருகிறார்கள்" என தெரிவித்தார்.