ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு |

தமிழ்சினிமாவில் ஒரு காலத்தில் அதிக கவுரவ வேடங்களில் நடித்தது ஜீவா, ஆர்யா ஆகியோர்தான். நட்புக்காக பந்தா இல்லாமல் சின்ன கேரக்டரில் கூட இவர்கள் நடித்தார்கள். பின்னர், அந்த இடத்தை விஜய்சேதுபதி பிடித்தார். பல படங்களில் அவர் கெஸ்ட்ரோலில் நடித்தார். சில படங்களுக்கு சம்பளம் கூட வாங்கியதில்லை. ஆனால், இதுவே அவர் இமேஜ்க்கு பிரச்னை ஏற்படுத்த, இனி யார் கேட்டாலும் சின்ன ரோலில், கெஸ்ட்ரோலில் நடிக்கமாட்டேன் என்று முடிவெடுத்தார்.
அதேபோல், தமிழில் 'மாஸ்டர், ஜவான்' படங்களில், 'உப்பென்னா' என்ற தெலுங்கு படத்தில் வில்லனாக நடித்தார். அதனால், தனது ஹீரோ இமேஜ், பிஸினஸ் அடிவாங்குவதாக நினைத்ததால் இனி ஹீரோவாக மட்டுமே நடிப்பேன். தமிழ் தெலுங்கு, இந்தி என எந்த மொழியாகட்டும் வில்லனாக நடிக்கமாட்டேன். எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் என் பாலிசியை மாற்றமாட்டேன் என்றும் முடிவெடுத்தார்.
இப்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் வில்லனாக நடிக்க விஜய்சேதுபதிக்கு அழைப்பு வந்து இருக்கிறதாம். மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்துவிட்டீர்கள். அஜித்துக்கும் வில்லன் ஆகிவிட்டால் நல்லா இருக்கும். உங்க கேரக்டர் வலுவாக இருக்கும். சம்பளமும் அதிகம். யோசித்து முடிவெடுங்கள் என்று விஜய்சேதுபதிக்கு துாது விடப்பட்டு இருக்கிறதாம்.
அதேபோல், லாரன்சின் அடுத்த படத்திலும் வில்லனாக நடிக்க விஜய்சேதுபதியிடம் கேட்கப்பட்டு இருக்கிறதாம். இப்பதான் நீங்க ஹீரோவாக நடித்த 'தலைவன் தலைவி' 100 கோடி வசூலித்துள்ளது. அடுத்து மிஷ்கினின் 'டிரைன்' வர உள்ளது. அடுத்து நீங்க ஹீரோவாக நடிக்கும் படங்கள் வரிசையில் உள்ளன. இந்த சூழ்நிலையில் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று நண்பர்கள் எச்சரித்து இருக்கிறார்கள். ஆனாலும், குழப்பத்தில் இருக்கிறாராம் விஜய்சேதுபதி.




