நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்தா...? | மாப்பிள்ளை அவர்தான் ஆனால்.. என்கிற பாணியில் நடிகை வழக்கில் கருத்து தெரிவிக்கும் மலையாள நட்சத்திரங்கள் | பெப்காவில் திலீப்பை சேர்க்க முயற்சி ; ராஜினாமா செய்த பெண் டப்பிங் கலைஞர் | தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு |

தமிழ்சினிமாவில் ஒரு காலத்தில் அதிக கவுரவ வேடங்களில் நடித்தது ஜீவா, ஆர்யா ஆகியோர்தான். நட்புக்காக பந்தா இல்லாமல் சின்ன கேரக்டரில் கூட இவர்கள் நடித்தார்கள். பின்னர், அந்த இடத்தை விஜய்சேதுபதி பிடித்தார். பல படங்களில் அவர் கெஸ்ட்ரோலில் நடித்தார். சில படங்களுக்கு சம்பளம் கூட வாங்கியதில்லை. ஆனால், இதுவே அவர் இமேஜ்க்கு பிரச்னை ஏற்படுத்த, இனி யார் கேட்டாலும் சின்ன ரோலில், கெஸ்ட்ரோலில் நடிக்கமாட்டேன் என்று முடிவெடுத்தார்.
அதேபோல், தமிழில் 'மாஸ்டர், ஜவான்' படங்களில், 'உப்பென்னா' என்ற தெலுங்கு படத்தில் வில்லனாக நடித்தார். அதனால், தனது ஹீரோ இமேஜ், பிஸினஸ் அடிவாங்குவதாக நினைத்ததால் இனி ஹீரோவாக மட்டுமே நடிப்பேன். தமிழ் தெலுங்கு, இந்தி என எந்த மொழியாகட்டும் வில்லனாக நடிக்கமாட்டேன். எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் என் பாலிசியை மாற்றமாட்டேன் என்றும் முடிவெடுத்தார்.
இப்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் வில்லனாக நடிக்க விஜய்சேதுபதிக்கு அழைப்பு வந்து இருக்கிறதாம். மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்துவிட்டீர்கள். அஜித்துக்கும் வில்லன் ஆகிவிட்டால் நல்லா இருக்கும். உங்க கேரக்டர் வலுவாக இருக்கும். சம்பளமும் அதிகம். யோசித்து முடிவெடுங்கள் என்று விஜய்சேதுபதிக்கு துாது விடப்பட்டு இருக்கிறதாம்.
அதேபோல், லாரன்சின் அடுத்த படத்திலும் வில்லனாக நடிக்க விஜய்சேதுபதியிடம் கேட்கப்பட்டு இருக்கிறதாம். இப்பதான் நீங்க ஹீரோவாக நடித்த 'தலைவன் தலைவி' 100 கோடி வசூலித்துள்ளது. அடுத்து மிஷ்கினின் 'டிரைன்' வர உள்ளது. அடுத்து நீங்க ஹீரோவாக நடிக்கும் படங்கள் வரிசையில் உள்ளன. இந்த சூழ்நிலையில் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று நண்பர்கள் எச்சரித்து இருக்கிறார்கள். ஆனாலும், குழப்பத்தில் இருக்கிறாராம் விஜய்சேதுபதி.