காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் |
சினிமாவில் 30 ஆண்டுகளை தொடுவது, 30 ஆண்டுகளை தாண்டி இன்றும் வெற்றிகரமாக இருப்பது என்பது சிலருக்கு மட்டுமே வாய்க்கும். அந்தவகையில் சினிமாவில் 30வது ஆண்டை தொட்டு இருக்கிறார் சுந்தர்.சி. அவர் இயக்கிய முதல் படமான 'முறைமாமன்' 1995ம் ஆண்டு வெளியானது. அதில் ஜெயராம், குஷ்பு நடித்து இருந்தனர்.
'அரண்மனை 4, மதகஜராஜா, கேங்கர்ஸ்' படங்களின் வெற்றிக்குபின் இப்போது நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்திஅம்மன் 2' படத்தை இயக்கி வருகிறார். சுந்தர்.சியின் கடைசி மூன்று படங்களுமே வர்த்தக ரீதியில் வெற்றி, தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்த படம். இப்போது இயக்கும் மூக்குத்திஅம்மன் 2, பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. அதில் அம்மன், போலீஸ் ஆபீசர் என 2 வேடத்தில் நயன்தாரா நடித்து வருகிறார்.
30 ஆண்டை தொட்ட சுந்தர்.சிக்கு திரையுலகினர் வாழ்த்தி வருகிறார்கள். சமீபத்தில் தங்கள் 25வது திருமண நாளை கொண்டாடிய குஷ்புவும், 'உங்கள் சினிமா வெறும் காமெடி மட்டுமல்ல, தமிழ் சினிமாவை பண்படுத்தியுள்ளது' என்று சுந்தர்.சி நடித்த படங்களின் முக்கியமான காட்சிகளை வெளியிட்டு அவர் காதல் மனைவி குஷ்புவும் வாழ்த்தியுள்ளார்.