அதை மட்டும் சொல்லாதீங்க : இந்திரா படக்குழு | டைரக்டர் ஆகிறாரா விஜய் சேதுபதி மகன்? | ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் | 'லியோ' மொத்த வசூல் 220 கோடி மட்டும் தானா? | செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு |
சினிமாவில் 30 ஆண்டுகளை தொடுவது, 30 ஆண்டுகளை தாண்டி இன்றும் வெற்றிகரமாக இருப்பது என்பது சிலருக்கு மட்டுமே வாய்க்கும். அந்தவகையில் சினிமாவில் 30வது ஆண்டை தொட்டு இருக்கிறார் சுந்தர்.சி. அவர் இயக்கிய முதல் படமான 'முறைமாமன்' 1995ம் ஆண்டு வெளியானது. அதில் ஜெயராம், குஷ்பு நடித்து இருந்தனர்.
'அரண்மனை 4, மதகஜராஜா, கேங்கர்ஸ்' படங்களின் வெற்றிக்குபின் இப்போது நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்திஅம்மன் 2' படத்தை இயக்கி வருகிறார். சுந்தர்.சியின் கடைசி மூன்று படங்களுமே வர்த்தக ரீதியில் வெற்றி, தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்த படம். இப்போது இயக்கும் மூக்குத்திஅம்மன் 2, பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. அதில் அம்மன், போலீஸ் ஆபீசர் என 2 வேடத்தில் நயன்தாரா நடித்து வருகிறார்.
30 ஆண்டை தொட்ட சுந்தர்.சிக்கு திரையுலகினர் வாழ்த்தி வருகிறார்கள். சமீபத்தில் தங்கள் 25வது திருமண நாளை கொண்டாடிய குஷ்புவும், 'உங்கள் சினிமா வெறும் காமெடி மட்டுமல்ல, தமிழ் சினிமாவை பண்படுத்தியுள்ளது' என்று சுந்தர்.சி நடித்த படங்களின் முக்கியமான காட்சிகளை வெளியிட்டு அவர் காதல் மனைவி குஷ்புவும் வாழ்த்தியுள்ளார்.