Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: ஒரே இரவில் கதை எழுதி உருவாக்கப்பட்ட “ஓர் இரவு” திரைப்படம்

20 மே, 2025 - 11:20 IST
எழுத்தின் அளவு:
Flashback:-The-film-“Or-Iravu”-was-written-and-created-in-one-night


திரைப்படங்களை பிரதான பிரசார ஊடகங்களாக அரசியலுக்குப் பயன்படுத்தி அதில் வெற்றி கண்டவர்தான் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் சி என் அண்ணாதுரை. 1948ம் ஆண்டு “நல்ல தம்பி” என்ற திரைப்படத்தில் வசனகர்த்தாவாக தமிழ் திரைத்துறைக்கு அறிமுகமாகி, பின் “வேலைக்காரி”, “சொர்க்க வாசல்”, “எதையும் தாங்கும் இதயம்”, “நல்லவன் வாழ்வான்” என பல படங்கள் இவரது கதை மற்றும் வசனங்களில் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருந்த நிலையில் இவரது “ஓர் இரவு” திரைப்படமும் எதிர்பார்ப்பை எகிறச் செய்திருந்தது. முதலில் நாடகமாக அரங்கேறி பலரது பாராட்டினைப் பெற்ற இந்தக் கதை, பின்னர் சினிமாவாக தயாரிக்கப்பட்டது.

இதோ ஓர் பெர்னாட்ஷா தமிழகத்தில் இருக்கிறார், இப்ஸனும் இருக்கிறார், இன்னும் கால்ஸ் வொர்த்தி கூட இருக்கின்றார் என்று “ஓர் இரவு” நாடகத்தைப் பார்த்த கல்கி ரா கிருஷ்ணமூர்த்தி நாடகத்தைப் பற்றிய தனது விமர்சனத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். சி என் அண்ணாதுரை எழுதி, கே ஆர் ராமசாமி நடித்து நடத்தி வந்த இந்த நாடகத்தை மிக நுட்பமாக கவனித்து வந்த ஏ வி மெய்யப்ப செட்டியார், இதை திரைப்படமாக எடுக்க முயற்சித்து, பின் சி என் அண்ணாதுரையை சந்தித்து ஒரு உடன்பாட்டையும் ஏற்படுத்திக் கொண்டார். அதன் பின் ஏ வி எம் ஸ்டூடியோவிற்கு வந்த சி என் அண்ணாதுரைக்கு ரூபாய் பத்தாயிரம் தரப்பட்டு படத்திற்கான கதை வசனங்களை எழுத வைத்தார் ஏ வி மெய்யப்ப செட்டியார். ஸ்டூடியோவிற்கு வந்த சி என் அண்ணாதுரை அங்கேயே தங்கி, ஒரே இரவுக்குள் படத்திற்கான 300 பக்கங்கள் கொண்ட திரைக்கதை வசனத்தை எழுதிக் கொடுத்தார்.

இந்தா, 300 பக்கங்கள் எழுதியிருக்கின்றேன். சினிமாவுக்கு ஏற்ற வகையில் இன்னும் ஏதாவது மாறுதல் செய்து கொள்ள வேண்டும் என்றால் நீ தாராளமாக செய்து கொள்ளலாம். உனக்கு என்னுடைய போக்கும் பாங்கும் நன்றாக தெரியும். தற்போது ஒரு அசோஸியேட் இயக்குநராக இருக்கும் நீயே இந்த “ஓர் இரவு” திரைப்படத்தை இயக்க வேண்டுமென்றும் நான் விரும்புகின்றேன் என கூறி கதை வசனக் காகிதங்களை இயக்குநர் ப நீலகண்டனிடம் கொடுத்தார் சி என் அண்ணாதுரை.

அதன்படி ப நீலகண்டனையே இயக்குநராக்குவது என்று ஏ வி மெய்யப்ப செட்டியாரும் தீர்மானிக்க, படத்தின் இயக்குநரானார் ப நீலகண்டன். கே ஆர் ராமசாமி, லலிதா, டி கே சண்முகம், பி எஸ் சரோஜா, ஏ நாகேஸ்வரராவ், டி எஸ் பாலையா, டி பி முத்துலட்சுமி, டி எஸ் துரைராஜ் என ஒரு நட்சத்திரக் கூட்டமே நடித்திருந்தும் நாடகம் பெற்ற வெற்றியைப் பெறத் தவறியது இந்த “ஓர் இரவு” திரைப்படம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'வணங்கான்' படத்தில் 'மிஸ்' ஆன வாய்ப்பு, இப்போது சூர்யா 46ல்…'வணங்கான்' படத்தில் 'மிஸ்' ஆன ... பெயரை மாற்றிய நடிகர் ஹம்சவர்தன்; 2 படங்களிலும் 'கமிட்' ஆனார் பெயரை மாற்றிய நடிகர் ஹம்சவர்தன்; 2 ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in