சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

மதுரை வந்த நடிகர் விஷால், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரைக்கு வந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போகாமல் எப்படி ஊருக்கு போக முடியும்? அப்புறம் எங்க அம்மா என்னை வீட்டுக்குள் சேர்க்க மாட்டாங்க. எங்கம்மா புடவை கொடுத்தாங்க, அதை அம்மனுக்கு கொடுத்து சாமி தரிசனம் செய்தேன். 2006ல் ‛திமிரு' பட சூட்டிங்கின்போது மதுரை வந்தேன், 19 வருஷம் கழிச்சு இப்போ வந்திருக்கிறேன். மனதார வேண்டிக் கொண்டேன்.
நடிகர் சங்க கட்டடம் தாமதத்திற்கு காரணம் நான் இல்லை. ஆறு மாதத்தில் முடிக்க வேண்டியதை நடிகர் சங்கம் தேர்தல் வைத்து எண்ணிக்கை என்ற பேரில் நீதிமன்றம் சென்றதால் 3 வருடம் தாமதம் ஆகிவிட்டது. இன்னும் நான்கு மாதத்தில் கட்டடம் பெரிசாக வந்துவிடும். இந்தியா -பாகிஸ்தான் போர் தேவையில்லாதது; இதை தவிர்த்து இருக்கலாம். நம்மை பாதுகாக்கும் ராணுவ வீரர்கள் உயிரிழக்கும் போது கஷ்டமாக இருக்கிறது. எல்லா நாட்டிற்கும் எல்லைகள் போடப்பட்டுள்ளது. அதை புரிந்து கொண்டு செயல்பட்டால் போரே தேவையில்லை.
மதுரை மக்கள் இரு விஷயத்துல மாறவே மாட்டாங்க. ஒன்று பாசம். மற்றொன்று உணவு. இந்த இரண்டு விஷயத்தில் மாறவே மாட்டார்கள். நூறு வருஷம் கழிச்சு வந்தாலும் அதே பாசமும் சிரிப்பும் அவர்களிடம் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.