'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடி தானா? | கென் கருணாஸூக்காக காய்ச்சல் உடன் வந்த தனுஷ்! | மார்ச் 16ல் 'நூறு சாமி' படத்தின் பர்ஸ்ட் லுக் | இரண்டு பாகங்களாக பிரியும் இதயம் முரளி! | மே மாதத்தில் திட்டமிடும் 'கருப்பு' படக்குழு! | மென்மையானவர் விஜய்... நல்ல குடும்பஸ்தர் அஜித்: மனம் திறந்த தமன்னா | 'திரு.மாணிக்கம்' திரைக்கதை புத்தகமாக வெளியீடு | தெலுங்கானா டிக்கெட் கட்டண உயர்வு : தடையை நீக்கிய உச்சநீதிமன்றம் | 3 படங்கள் 1000 கோடி முதலீடு, மீண்டு வருமா தயாரிப்பு நிறுவனம் ? | முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை படமாகிறது: சமுத்திரக்கனி இயக்குகிறார்? |

சில உண்மை சம்பவங்களை படமாக எடுப்பார்கள். சில சம்பவங்கள் படங்களை பார்த்தும் உருவாகும். சில குற்றவாளிகள் தாங்கள் இந்த படத்தை பார்த்துதான் இப்படி செய்தோம் என்று கூறுவது வழக்கமாக நடந்து வருகிறது. இதில் முக்கியமானது 100வது நாள் படம்.
இந்த படத்தில் கொலை செய்து பிணத்தை சுவரில் மறைத்து வைப்பது பார்த்துதான் தானும் கொலை செய்து பிணத்தை மறைத்து வைத்ததாக பின்னாளில் தூக்கிலிடப்பட்ட ஆட்டோ சங்கர் கூறினான்.
100வது நாள் படம் 1984ம் ஆண்டு வெளிவந்தது. இந்த படம் 'செட் நோட் இன் நீரோவின்' என்ற இத்தாலிய படத்தின் அப்பட்டமான காப்பி. தனது குரு பாரதிராஜா எடுத்த 'சிகப்பு ரோஜாக்கள்' படம் போன்று தானும் எடுக்க விரும்பிய மணிவண்ணன் இயக்கிய படம். இதில் விஜயகாந்த், மோகன், நளினி, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
படத்தின் நாயகி நளினிக்கு சிலர் கொல்லப்படுவது போன்ற முன்னறிவிப்பு வரும். மறுநாள் அது நடக்கும். அவளுக்கு முன்னறிவிப்பு செய்வது யார்? கொலை செய்வது யார், கொலை செய்யப்படுவது யார் என்பதுதான் படத்தின் கதை.
தமிழில் பெரிய வெற்றி பெற்று மலையாளத்தில் ஆயிரம் கண்ணுகள் (1986) என்ற பெயரிலும், ஹிந்தியில் 100 டேஸ் (1991) என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டது. இப்படம், குறைந்த செலவில், பன்னிரண்டு நாட்களில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.




