‛நூறு சாமி' படக் கதை குறித்து பகிர்ந்த சசி | முத்து என்கிற காட்டானுக்கு பின்னால் நடந்ததையும் வெப் தொடராக எடுக்கலாம் : விஜய் சேதுபதி | ஓடிடியில் வரவேற்பைப் பெற்ற 'மேட் இன் கொரியா' | துரந்தர் : இரண்டு பாகங்களிலும் 1000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் | பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் |

சில உண்மை சம்பவங்களை படமாக எடுப்பார்கள். சில சம்பவங்கள் படங்களை பார்த்தும் உருவாகும். சில குற்றவாளிகள் தாங்கள் இந்த படத்தை பார்த்துதான் இப்படி செய்தோம் என்று கூறுவது வழக்கமாக நடந்து வருகிறது. இதில் முக்கியமானது 100வது நாள் படம்.
இந்த படத்தில் கொலை செய்து பிணத்தை சுவரில் மறைத்து வைப்பது பார்த்துதான் தானும் கொலை செய்து பிணத்தை மறைத்து வைத்ததாக பின்னாளில் தூக்கிலிடப்பட்ட ஆட்டோ சங்கர் கூறினான்.
100வது நாள் படம் 1984ம் ஆண்டு வெளிவந்தது. இந்த படம் 'செட் நோட் இன் நீரோவின்' என்ற இத்தாலிய படத்தின் அப்பட்டமான காப்பி. தனது குரு பாரதிராஜா எடுத்த 'சிகப்பு ரோஜாக்கள்' படம் போன்று தானும் எடுக்க விரும்பிய மணிவண்ணன் இயக்கிய படம். இதில் விஜயகாந்த், மோகன், நளினி, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
படத்தின் நாயகி நளினிக்கு சிலர் கொல்லப்படுவது போன்ற முன்னறிவிப்பு வரும். மறுநாள் அது நடக்கும். அவளுக்கு முன்னறிவிப்பு செய்வது யார்? கொலை செய்வது யார், கொலை செய்யப்படுவது யார் என்பதுதான் படத்தின் கதை.
தமிழில் பெரிய வெற்றி பெற்று மலையாளத்தில் ஆயிரம் கண்ணுகள் (1986) என்ற பெயரிலும், ஹிந்தியில் 100 டேஸ் (1991) என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டது. இப்படம், குறைந்த செலவில், பன்னிரண்டு நாட்களில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.