'ஜெயிலர் 2' படத்தில் எந்தவொரு பாலிவுட் நடிகரும் இல்லை! | முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சாய் பல்லவி! | 'யாமிருக்க பயமே' இயக்குனருடன் கைகோர்க்கும் நித்யா மேனன்! | 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் நாங்கள் எடுத்த ரிஸ்க்: கமல்ஹாசன் | மே மாதப் படங்கள்: 2026ன் முதல் வசூல் வெற்றி | ஹீரோக்களை ஓரங்கட்டிய பிசாசு நடிகை | அரசியல்: கோபத்தில் கொந்தளிக்கும் நடிகர் | பிளாஷ்பேக்: சிவாஜி - சவுகார் ஜானகி இணைந்து நடித்த முதல் திரைக்காவியம் “படிக்காத மேதை” | திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா லாரன்ஸ்? ஜூன் 11ல் முக்கிய அறிவிப்பு | 'திரிஷ்யம்-3' ஹிந்தி பதிப்பு மாறுபட்ட கதை: அஜய் தேவ்கன் |

இப்போதெல்லாம் விஷாலின் படங்களை விட அவரைப் பற்றிய செய்திகள்தான் அதிகமாக வருகிறது. அவர் எங்கு சென்றாலும், எதை செய்தாலும் பரபரப்பாகிறார். பட விழாவில் ஏற்பட்ட கை நடுக்கம், கூவாகம் விழாவில் மயங்கியது என அடுத்தடுத்து உடல்நல பாதிப்பு சர்ச்சையில் சிக்கினார். இந்த நிலையில் தான் ஒரு மாதமாக காதலித்து வருவதாகவும் நான்கு மாதத்திற்குள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நடிகர் சங்க கட்டிடம் தான் என் கனவு. அதனால் தான் கட்டிடம் கட்டப்பட்ட பின்னரே எனக்கு திருமணம் என்று அறிவித்தேன். வெறும் வாய் வார்த்தைக்காக மட்டும் இதை சொல்லவில்லை. ஒரு சவாலாக எடுத்துக் கொண்டேன். 3 ஆண்டுகளில் முடிந்துவிடும் என்று நினைத்தேன். ஆனால் 9 ஆண்டுகள் தாண்டிவிட்டது.
நடிகர் சங்க கட்டிடம் முழுமையடையும் நிலையில் இருக்கிறது. ஆகஸ்ட் 15ம் தேதி நடிகர் சங்க கட்டிடத்தை திறக்க திட்டமிட்டுள்ளோம். அனேகமாக ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் எனக்கு திருமணம் உறுதியாக நடக்கும். என் பிறந்தநாளான ஆகஸ்ட் 29ம் தேதி கூட எனக்கு திருமணம் நடைபெறலாம். எப்படி பார்த்தாலும் இன்னும் 4 மாதத்தில் எனக்கு திருமணம் நடக்கும்.
நான் திருமணம் செய்யப்போகும் பெண் யார் என்பதை நேரம் வரும்போது சொல்கிறேன். ஒரு மாதமாகத்தான் அந்த பெண்ணை காதலித்து வருகிறேன். விரைவில் நல்ல தகவல் சொல்கிறேன். பெண் பார்த்து விட்டோம். பேசி முடித்துவிட்டோம். காதல் திருமணம்தான்.
இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.