லாரன்ஸ் உடன் இணையும் மாதவன், நிவின் பாலி | பிறந்தநாளில் சூர்யா 45 பட அப்டேட் | மோகன்லாலின் மலையாள படப்பிடிப்புக்கு விசிட் அடித்த நெல்சன் : ஜெயிலர் 2விலும் நடிப்பது உறுதி | காந்தாரா படப்பிடிப்பில் ஆற்றில் மூழ்கி துணை நடிகர் உயிரிழப்பு | எளிமையாக நடைபெற்ற ரெமோ வில்லனின் திருமணம் | ரெட்ரோ படப்பிடிப்பில் காயம் அடைந்த சிறுமிக்கு உதவிக்கரம் நீட்டிய மம்முட்டி | கலைஞர்களுக்காகவே உருவாக்கப்பட்ட 'குங்குனாலோ' செயலி | அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நடிக்கிறாரா சமந்தா? அவரே வெளியிட்ட தகவல் | பெயரை மாற்ற போகிறாரா தெலுங்கு நடிகர் நானி? | விஜய் பிறந்தநாளில் 'ஜனநாயகன்' அறிமுக டீசர் வெளியாகிறது? |
மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன் 1, 2' படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். இந்த படத்தின் பாடல்கள் பெரிய வரவேற்பை பெற்றது, விருதுகளையும் பெற்றது. இந்த நிலையில் படத்தில் இடம்பெற்ற 'வீரா ராஜ வீரா' என்ற பாடல் காப்புரிமை பிரச்சினையில் சிக்கியது. பாலிவுட் பாடகர் பயாஸ் வாசிபுதீன் தாகர் என்பவர் டில்லி ஐகோர்ட்டில் ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், வீரா ராஜ வீரா பாடல், தனது தாத்தா நசீர் பயாசுதீன் தாகர் மற்றும் தந்தை ஜாஹிருதீன் தாகர் ஆகியோரால் 1970ல் இசையமைக்கப்பட்ட 'சிவ ஸ்துதி' என்ற பாடலில் இருந்து காப்பி அடிக்கப்பட்டுள்ளது' என குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த வழக்கில் பாடலின் மூலப்பதிவை ஏ.ஆர்.ரஹ்மான் கோர்ட்டில் சமர்ப்பித்திருந்தார். அதை கேட்ட நீதிபதிகள், வரிகள் தனித்தனியாக இருந்தாலும் ராகம் ஒன்றுதான் எனவே காப்புரிமை சட்டப்படி ஏ.ஆர்.ரஹ்மான், பயாஸ் வாசிபுதீன் தாகர் தரப்புக்கு 2 கோடி வழங்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஏ.ஆர்.ரஹ்மான் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ஏ.ஆர்.ரஹ்மான் 2 கோடி கொடுக்கும் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.