தலையில் மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றிய அஜித்குமார்! | கொக்கைன் விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவுக்கு சம்மன் | சிம்புவின் 50வது படம் டிராப்பா? | ரசிகர்கள் விரும்பும் படத்தை கொடுக்கவில்லை: 'தக் லைப்' தோல்விக்கு மன்னிப்பு கேட்ட மணிரத்னம் | ஆக் ஷன் ஹீரோக்கள் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : கஜோல் | 'கேம் சேஞ்ஜர்' படத்துக்கு பச்சைக்கொடி காட்டியிருக்க கூடாது: தயாரிப்பாளர் தில் ராஜூ புலம்பல் | தமிழ்த் தலைப்புகளும், ஆங்கிலத் தலைப்புகளும் மோதும் ஜுன் 27 ரிலீஸ் | மாலத்தீவில் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய காஜல் அகர்வால் | மீண்டும் வெளியாகும் 'சேது' | அன்னை இல்ல வழக்கு தள்ளுபடி: சிவாஜி குடும்பம் நிம்மதி |
மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன் 1, 2' படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். இந்த படத்தின் பாடல்கள் பெரிய வரவேற்பை பெற்றது, விருதுகளையும் பெற்றது. இந்த நிலையில் படத்தில் இடம்பெற்ற 'வீரா ராஜ வீரா' என்ற பாடல் காப்புரிமை பிரச்சினையில் சிக்கியது. பாலிவுட் பாடகர் பயாஸ் வாசிபுதீன் தாகர் என்பவர் டில்லி ஐகோர்ட்டில் ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், வீரா ராஜ வீரா பாடல், தனது தாத்தா நசீர் பயாசுதீன் தாகர் மற்றும் தந்தை ஜாஹிருதீன் தாகர் ஆகியோரால் 1970ல் இசையமைக்கப்பட்ட 'சிவ ஸ்துதி' என்ற பாடலில் இருந்து காப்பி அடிக்கப்பட்டுள்ளது' என குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த வழக்கில் பாடலின் மூலப்பதிவை ஏ.ஆர்.ரஹ்மான் கோர்ட்டில் சமர்ப்பித்திருந்தார். அதை கேட்ட நீதிபதிகள், வரிகள் தனித்தனியாக இருந்தாலும் ராகம் ஒன்றுதான் எனவே காப்புரிமை சட்டப்படி ஏ.ஆர்.ரஹ்மான், பயாஸ் வாசிபுதீன் தாகர் தரப்புக்கு 2 கோடி வழங்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஏ.ஆர்.ரஹ்மான் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ஏ.ஆர்.ரஹ்மான் 2 கோடி கொடுக்கும் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.