எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 | டில்லியில் ஹேமமாலினியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பாலகிருஷ்ணா | ‛ப்ரோ 2' ஸ்கிரிப்ட் ரெடி : பவன் கல்யாணின் கிரீன் சிக்னலுக்கு காத்திருக்கும் சமுத்திரக்கனி | சாய்பல்லவி நடித்த முதல் ஹிந்தி பாடலுக்கு வரவேற்பு | துரந்தர் 2 : படம் பார்க்காமல் பாராட்டிய ஆமிர்கான் | சான்வே மேக்னாவின் புதிய படம் | பிளாஷ்பேக்: இளையராஜாவின் ஆல்பம் இசையை பின்னணி இசையாக பயன்படுத்திய பாலுமகேந்திரா | பிளாஷ்பேக் : கடைசி வரை கஷ்டத்தில் வாழ்ந்த புஷ்பவல்லி | நிறைய சுமைகளை சுமக்காதீர்கள் : சமுத்திரகனி அட்வைஸ் |

தமிழ் சினிமாவில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பாக டாப் காமெடி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் சந்தானம். டிவியில் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் நடித்தும், தொகுத்தும் வழங்கி வந்த சந்தானத்தை 2004ல் வெளிவந்த 'மன்மதன்' படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகம் செய்தவர் சிம்பு. அதன்பின் தனது நகைச்சுவை நடிப்பு மூலமாக கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் சந்தானம்.
குறுகிய காலத்திலேயே பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். அதன்பின் அவருக்கும் கதாநாயகனாக நடிக்கும் ஆசை வந்தது. நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி பத்து வருடங்களுக்குப் பிறகு அவர் கதாநாயகனாக நடித்த 'வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்' படம் வெளிவந்தது. சுமாரான வரவேற்பை அந்தப் படம் பெற்றாலும் தொடர்ந்து கதாநாயகாக மட்டுமே நடிப்பேன் என்பதில் பிடிவாதமாக இருந்தார் சந்தானம். முன்னதாக காமெடி நடிகராக நடிக்க ஒப்புக் கொண்ட சில படங்கள் அடுத்தடுத்து வெளிவந்தன.
தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2, பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, டிடி ரிட்டர்ன்ஸ், வடக்குபட்டி ராமசாமி ஆகிய சில படங்கள் அவரது கதாநாயகப் படங்களில் வரவேற்பைப் பெற்ற படங்களாக இருந்தது. தற்போது நாயகனாக நடித்துள்ள 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' படம் மே 16ம் தேதி வெளியாக உள்ளது.
இதனிடையே, சிம்பு அடுத்து நடிக்க உள்ள படத்தில் சந்தானம் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கும் அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியானது. ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் இப்படத்தின் பூஜை இன்று(மே 3) சென்னையில் நடைபெற்றது. சிம்பு, கயாடு லோஹர் ஆகியோர் நாயகன் நாயகியாக நடிக்கிறார்கள். சாய் அபயங்கர் படத்திற்கு இசையமைக்கிறார்.
தனது கதாநாயகக் கொள்கையை, தன்னை அறிமுகப்படுத்திய சிம்புவுக்காக விட்டுக் கொடுத்து இப்படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார் சந்தானம். இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்கள் இருவரது ரசிகர்களிடத்திலும் மகிழ்வைத் தந்துள்ளன. அது போல படமும் தரும் என எதிர்பார்ப்போம்.