டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் | மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் |
தமிழில் காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா போன்ற படங்களில் நடித்தவர் மேக்னாராஜ். கன்னட நடிகையான இவர் கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா என்பவரை காதலித்து கடந்த 2018ம் ஆண்டு திருமண செய்து கொண்டார். திருமணம் ஆகி இரண்டே ஆண்டுகளில் சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால் மரணம் அடைந்தார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான்.
சிரஞ்சீவி சார்ஜா இறந்த ஓராண்டிலேயே மேக்னா ராஜ் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக ஒரு செய்தி வெளியானது. அப்போது அவர், நான் எப்போதுமே எனது மகனின் எதிர்காலம் குறித்து மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். அதனால் எனது வாழ்க்கையில் இரண்டாவது திருமணத்திற்கு வாய்ப்பே இல்லை என்று விளக்கம் கொடுத்திருந்தார்.
ஆனபோதும் தற்போது அவரது கணவர் இறந்து ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மேகனா ராஜ் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக ஒரு செய்தி வைரலாகி வருகிறது. அதற்கு ஒரு விளக்கம் கொடுத்துள்ளார் மேக்னாராஜ். அதில், தனது கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு, எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எனக்கு நீ மட்டுமே கணவர் என்று பதிவிட்டுள்ளார்.
இதை வைத்து பார்க்கும் போது மேக்னா ராஜ் மறுமணம் செய்து கொள்வதற்கு வாய்ப்பே இல்லை என்பது உறுதியாகி உள்ளது.