கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 | டில்லியில் ஹேமமாலினியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பாலகிருஷ்ணா | ‛ப்ரோ 2' ஸ்கிரிப்ட் ரெடி : பவன் கல்யாணின் கிரீன் சிக்னலுக்கு காத்திருக்கும் சமுத்திரக்கனி | சாய்பல்லவி நடித்த முதல் ஹிந்தி பாடலுக்கு வரவேற்பு | துரந்தர் 2 : படம் பார்க்காமல் பாராட்டிய ஆமிர்கான் |

போக்குவரத்து போலீசார் அவ்வப்போது திரைப்படங்களின் போஸ்டர்கள் மற்றும் அதில் இடம்பெறும் காட்சிகளை வைத்து போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அப்படி சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'தொடரும்' படத்தின் போஸ்டர் ஒன்றை வைத்து கேரள போலீஸார் ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை வலியுறுத்தி சோசியல் மீடியாவில் விழிப்புணர்வு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரில் மோகன்லால் ஹெல்மெட் அணியாமல், இரு சக்கர வாகனம் ஓட்டி செல்கிறார். இதை குறிப்பிட்டு அனைவரும் பாதுகாப்பாக இருக்க ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுங்கள் என்று போலீசார் கூறியுள்ளனர்.
அதே சமயம் மோகன்லால் ரசிகர்கள் பலரும் இதற்கு கிண்டலாக விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள பதில் கருத்துக்களில் கூறப்பட்டுள்ளதாவது, “இது ஒரு படத்தின் போஸ்டர். மோகன்லால் தான் வண்டி ஓட்டுகிறார் என்பது தெரிய வேண்டும் என்பதற்காக ஹெல்மெட் அணியாமல் இந்த போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார்கள். அது மட்டுமல்ல படத்தின் காட்சிப்படி தனது காரை மகனும் அவன் நண்பர்களும் தெரியாமல் எடுத்து ஓட்டி செல்லும் போது அவர்களை தடுத்து நிறுத்துவதற்காக அவசரத்திற்கு கிடைத்த தனது நண்பனின் வண்டியை எடுத்துக்கொண்டு காரை விரட்டி செல்வதாக காட்சி. இதில் ஹெல்மெட் எல்லாம் போட அவர் யோசித்துக் கொண்டிருப்பாரா?
அதேசமயம் இதே படத்தில் இன்னொரு காட்சியில் மோகன்லால் கார் ஓட்டிக் கொண்டு வரும்போது, காருக்கு பக்கவாட்டில், அவருக்கு தெரிந்த ஒர்க்ஷாப்பில் வேலை பார்க்கும் பையன் ஹெல்மெட் அணியாமல் மோகன்லாலுடன் பேசிக்கொண்டே டூவீலர் ஓட்டிக்கொண்டு வருவான். அப்போது அவனிடம் ஹெல்மெட்டை அணிந்து கொண்டு வண்டி ஓட்டு, அதுதான் பாதுகாப்பு என்று மோகன்லால் சொல்வார். உடனே அந்த இளைஞன் ஹெல்மெட்டை எடுத்து அணிந்து கொள்வார். இதெல்லாம் உங்கள் கண்களுக்கு படவில்லையா” என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.