50 கோடியில் காசி செட் : ராஜமவுலி படத்துக்காக தயாராகுது | ‛பஞ்சாயத்து' சீரிஸ் என்னை இந்தியா முழுக்க அறிய வைத்திருக்கிறது - நீனா குப்தா பெருமிதம் | டிஎன்ஏ படத்தை அவங்களுக்கு அர்ப்பணிக்கிறேன் : ஹீரோ அதர்வா முரளி நெகிழ்ச்சி | 'தி ராஜா சாப் 1000 கோடி வசூலிக்கும்' : இயக்குனர் மாருதி நம்பிக்கை | ஐதராபாத் திரைப்பட நகரம் பற்றி கஜோல் பேச்சு : திரையுலகம் அதிர்ச்சி | தக் லைப் - கர்நாடகா வினியோகஸ்தர் விலகல்? | குத்துச்சண்டை வீரராகிறார் மஹத் | கிஷோர் ஜோடியாக இணைந்த அம்மு அபிராமி | மலேசிய பாடகர் 'டார்க்கி' நாகராஜா வாழ்க்கை சினிமா ஆகிறது | வெப் தொடராக ஒளிபரப்பாகிறது முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை வழக்கு |
கடந்த வருடம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய பேண்டஸி படங்களான கல்கி மற்றும் கங்குவா ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் பாலிவுட் நடிகை திஷா பதானி. இவரது தங்கை குஷ்பூ பதானி பரேலியில் தனது தந்தையும் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியுமான ஜெகதீஷ் பதானியுடன் வசித்து வருகிறார். சமீபத்தில் வழக்கம் போல காலையில் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக கிளம்பி சென்றுள்ளார் குஷ்பூ பதானி. அப்போது அருகில் இருந்த ஒரு பாழடைந்த கட்டடத்திற்குள் இருந்து குழந்தையின் அழுகுரல் ஒன்று கேட்டுள்ளது. அந்த கட்டிடத்திற்கு நேரடியாக உள்ளே செல்லும் வழி சரியாக இல்லாததால் சுவற்றில் ஏறி குதித்து உள்ளே சென்று பார்த்துள்ளார் குஷ்பூ பதானி.
அங்கே 10 மாத குழந்தை ஒன்று அழுது கொண்டு இருந்ததை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவர் அந்த குழந்தையை தனது வீட்டிற்கு எடுத்து வந்து முதலுதவி செய்து பசியாற்றி பின் காவல்துறைக்கு தகவல் அளித்தார். இதனைத் தொடர்ந்து போலீஸார் அந்த குழந்தையை எடுத்துச் சென்று அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இப்படி குழந்தையை காப்பாற்றிய வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி அவருக்கு பாராட்டுக்களை பெற்றுத் தந்துள்ளது அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து இந்த குழந்தையை யார் இப்படி கொண்டு வந்து விட்டு சென்றது என தேடி போலீஸார் வருகின்றனர்.