புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் |
பாலிவுட்டின் நட்சத்திர ஜோடியான ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இரு தினங்களுக்கு முன்பு தங்களது 18வது திருமண நாளைக் கொண்டாடி இருக்கிறார்கள். அன்று இன்ஸ்டா தளத்தில் தனது கணவர் அபிஷேக் பச்சன், மகள் ஆராத்யா ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ராய். ஒரே ஒரு 'ஹாட்டின்' எமோஜி மட்டுமே அந்தப் பதிவில் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து வரும் பிரிவு வதந்திகளுக்கு அவர் மீண்டும் ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அப்பதிவிற்கு பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் லைக் செய்து வாழ்த்தியுள்ளார்கள். அதே சமயம், ஐஸ்வர்யாவின் அந்தப் பதிவை அபிஷேக் பச்சன் மறு பதிவு செய்யவில்லை என்றும் சிலர் சமூக வலைத்தளங்களில் ஒரு நெகட்டிவிட்டியைப் பரப்பியுள்ளார்கள்.
'பொன்னியின் செல்வன் 2' படத்திற்குப் பிறகு கடந்த இரண்டு வருடங்களாக எந்த ஒரு படத்திலும் ஐஸ்வர்யா ராய் நடிக்கவில்லை. அபிஷேக் பச்சன் நடித்து கடந்த மாதம் 'பி ஹேப்பி' படம் வெளிவந்தது.