சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
தெலுங்கு இளம் நடிகரான நாகசைதன்யா சில மாதங்களுக்கு முன்பு நடிகை சோபிதா துலிபாலாவை மறுமணம் செய்து கொண்டார்.. இதனை தொடர்ந்து மீண்டும் தனது தொழிலில் மீண்டும் கவனம் செலுத்த துவங்கியுள்ள நாகசைதன்யா நடிப்பில் உருவான தண்டேல் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. ஓரளவு நல்ல வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது.
இதனைத் தொடர்ந்து தற்போது புதிதாக உருவாகி வரும் மாய சபா - சீசன் 1 என்கிற வெப் சீரிஸிலும் நடித்துள்ளார் நாகசைதன்யா. இந்த வெப் சீரிஸை தற்போது ராஜமவுலி - மகேஷ் பாபு இருவர் கூட்டணியில் உருவாகி வரும் படத்திற்கு வசனம் எழுதி வரும் வசனகர்த்தாவான தேவகட்டா இயக்கியுள்ளார். கிட்டத்தட்ட 400 நிமிடங்கள் ஓடும் விதமாக உருவாகியுள்ள இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் இந்த வெப் சீரிஸ் வெளியாகும் என தேவகட்டா கூறியுள்ளார். இதற்கு முன்னதாக நாகசைதன்யா 2023ல் விக்ரம் கே குமார் இயக்கத்தில் உருவான தூதா என்கிற வெப் சீரிஸில் முதன்முறையாக நடித்திருந்தார். அந்த வெப் சீரிஸ் மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஒரு பக்கம் திரைப்படம் இன்னொரு பக்கம் வெப்சீரிஸ் என இரண்டுக்கும் சம முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்துள்ளாராம் நாகசைதன்யா.