சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

சோசியல் மீடியாவை எப்படி முறையாக பயன்படுத்த வேண்டும் என்கிற சிற்றறிவு கூட இல்லாத சில நபர்கள் உயிருடன் இருப்பவர்களையே இறந்து விட்டதாக கூறி பொய் செய்தி பரப்புவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். பல பிரபலங்களுக்கு இது போன்று நடந்துள்ளது. இந்த முறை அப்படி ஒரு பொய் தகவலில் மாட்டிக் கொண்டவர் பிரபல மலையாள பின்னணி பாடகர் வேணுகோபால்.
சில மாதங்களுக்கு முன்பு தான் இவர் இறந்து விட்டதாக ஒரு பொய் செய்தி பரவி அதை அவர் மறுத்த நிலையில், தற்போது மீண்டும் அதே போல அவர் இறந்து விட்டதாக ஒரு பொய் தகவலை சோசியல் மீடியாவில் சில விஷமிகள் பரப்பி உள்ளனர்.
தற்போது காஷ்மீர் பகுதியில் தனது மனைவியுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் வேணுகோபால். இவரது இறப்பு குறித்த இந்த பொய் செய்தியை அவரது நண்பர்கள் தங்களது வாட்ஸ் அப் குரூப்பில் அவருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
இதனை தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரே வருடத்தில் இரண்டு முறை இறப்பு தேடி வந்து விட்டதால் எனது எதிர்காலம் நிச்சயம் நன்றாகத்தான் இருக்கும். இப்போதைக்கு நான் சாக விரும்பவில்லை என்று ஊருக்கு வந்ததும் ஒரு பிரஸ்மீட் வைத்து சொல்லி விடவா ?” என்று விரத்தியுடன் கேட்டுள்ளார்.