ரவிதேஜாவின் 76வது படம் ரிலீஸ் தேதியுடன் அறிவிப்பு | நடிகர் விநாயகனின் விமர்சனத்திற்கு நடிகர் சலீம் குமாரின் மகன் பதில் | தனுஷ் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கிர்த்தி சனோன் | புதிய ஆரம்பம் - நடிகர் கிருஷ்ணா இரண்டாவது திருமணம் | பிரித்விராஜ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் ; ஜோஜூ ஜார்ஜ் | மகளுக்கு டைட்டில் கார்டில் இடம் கொடுத்த மணிரத்னம் ; நன்றி சொன்ன குஷ்பு | 'கல்கி 2' படத்திலிருந்தும் தீபிகா படுகோனே விலகல்? | இந்தியன் 2 படத்தை விட குறைவாக வசூலித்த தக் லைப் | மீண்டும் தள்ளிப் போகும் 'ஹரிஹர வீர மல்லு' | சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? |
சோசியல் மீடியாவை எப்படி முறையாக பயன்படுத்த வேண்டும் என்கிற சிற்றறிவு கூட இல்லாத சில நபர்கள் உயிருடன் இருப்பவர்களையே இறந்து விட்டதாக கூறி பொய் செய்தி பரப்புவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். பல பிரபலங்களுக்கு இது போன்று நடந்துள்ளது. இந்த முறை அப்படி ஒரு பொய் தகவலில் மாட்டிக் கொண்டவர் பிரபல மலையாள பின்னணி பாடகர் வேணுகோபால்.
சில மாதங்களுக்கு முன்பு தான் இவர் இறந்து விட்டதாக ஒரு பொய் செய்தி பரவி அதை அவர் மறுத்த நிலையில், தற்போது மீண்டும் அதே போல அவர் இறந்து விட்டதாக ஒரு பொய் தகவலை சோசியல் மீடியாவில் சில விஷமிகள் பரப்பி உள்ளனர்.
தற்போது காஷ்மீர் பகுதியில் தனது மனைவியுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் வேணுகோபால். இவரது இறப்பு குறித்த இந்த பொய் செய்தியை அவரது நண்பர்கள் தங்களது வாட்ஸ் அப் குரூப்பில் அவருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
இதனை தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரே வருடத்தில் இரண்டு முறை இறப்பு தேடி வந்து விட்டதால் எனது எதிர்காலம் நிச்சயம் நன்றாகத்தான் இருக்கும். இப்போதைக்கு நான் சாக விரும்பவில்லை என்று ஊருக்கு வந்ததும் ஒரு பிரஸ்மீட் வைத்து சொல்லி விடவா ?” என்று விரத்தியுடன் கேட்டுள்ளார்.