ஆர்த்தி ரவியின் பதிவுக்கு கெனிஷா பதிலடி | மேடம் டுசாட் மியூசியத்தில் மெழுகுச் சிலையுடன் போஸ் கொடுத்த ராம்சரண் | தயாரிப்பாளர் சர்ச்சை முடிந்து சமரசம் : படப்பிடிப்புக்கு திரும்பிய நிவின்பாலி | தேங்காய் பன்னுக்காக அலைந்த எனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு : கண் கலங்கிய சூரி | சூர்யா மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் : கார்த்திக் சுப்பராஜ் பதில் | ரஜினி பெயரும் 'தேவா', தனுஷ் பெயரும் 'தேவா' !! | தமிழ்த் தலைப்புகளை தவிர்க்கும் தமிழ்த் திரையுலகம் | ட்ரைன் : முழு கதையையும் இப்படி சொல்லிட்டீங்களே மிஷ்கின் | விஷால் திடீரென மயங்கியது ஏன்...? | கவலையில் கஜானா படக்குழு : ரிலீஸான படத்தை தள்ளி வைத்தது |
சோசியல் மீடியாவை எப்படி முறையாக பயன்படுத்த வேண்டும் என்கிற சிற்றறிவு கூட இல்லாத சில நபர்கள் உயிருடன் இருப்பவர்களையே இறந்து விட்டதாக கூறி பொய் செய்தி பரப்புவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். பல பிரபலங்களுக்கு இது போன்று நடந்துள்ளது. இந்த முறை அப்படி ஒரு பொய் தகவலில் மாட்டிக் கொண்டவர் பிரபல மலையாள பின்னணி பாடகர் வேணுகோபால்.
சில மாதங்களுக்கு முன்பு தான் இவர் இறந்து விட்டதாக ஒரு பொய் செய்தி பரவி அதை அவர் மறுத்த நிலையில், தற்போது மீண்டும் அதே போல அவர் இறந்து விட்டதாக ஒரு பொய் தகவலை சோசியல் மீடியாவில் சில விஷமிகள் பரப்பி உள்ளனர்.
தற்போது காஷ்மீர் பகுதியில் தனது மனைவியுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் வேணுகோபால். இவரது இறப்பு குறித்த இந்த பொய் செய்தியை அவரது நண்பர்கள் தங்களது வாட்ஸ் அப் குரூப்பில் அவருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
இதனை தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரே வருடத்தில் இரண்டு முறை இறப்பு தேடி வந்து விட்டதால் எனது எதிர்காலம் நிச்சயம் நன்றாகத்தான் இருக்கும். இப்போதைக்கு நான் சாக விரும்பவில்லை என்று ஊருக்கு வந்ததும் ஒரு பிரஸ்மீட் வைத்து சொல்லி விடவா ?” என்று விரத்தியுடன் கேட்டுள்ளார்.