மகளிர் ஆணையத்தில் மனைவியுடன் நேரில் ஆஜரான மாதம்பட்டி ரங்கராஜ் | படப்பிடிப்புக்கு 5 நாட்களுக்கு முன்புதான் பைசன் படத்தின் ஸ்கிரிப்டை படித்தேன்! - துருவ் விக்ரம் | ‛உஸ்தாத் பகத்சிங்' படத்தில் இணைந்த பார்த்திபன் | பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு : நடிகர் விஷால் பதிலளிக்க உத்தரவு | 'கோச்சடையான்' பட விவகாரம் : ரஜினி மனைவி லதாவுக்கு சிக்கல் | விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் தமிழ்நாட்டு தியேட்டர் உரிமையை வாங்கிய ரோமியோ பிக்சர்ஸ்! | மோகன்லாலை தொடர்ந்து சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன்! | காப்புரிமை தொடர்பான 'சோனி' வழக்கு : இளையராஜா பதில் அளிக்க கோர்ட் உத்தரவு | ப்ரீ புக்கிங்கில் முந்தும் 'டியூட்' | 3 ஆண்டு தலைமறைவுக்கு பின் நடிகை மீரா மிதுன் ஆஜர் |
எஸ்யு அருண்குமார் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், விக்ரம், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் 'வீர தீர சூரன் 2'. மார்ச் 27ம் தேதி வெளியீடு என்று அறிவித்துவிட்டு கடைசி நேரத்தில் இப்படத்திற்கு நீதிமன்றத்தில் தடை வாங்கினார்கள்.
ஓடிடி உரிமையைப் பெற்றிருந்த பி4யு என்ற நிறுவனம் டில்லி நீதிமன்றத்தில் படத்திற்கான தடையை வாங்கியது. படத்தின் சம்பள பாக்கிக்காக நாயகன் விக்ரமிடம் ஓடிடி உரிமையை தயாரிப்பாளர் கொடுத்ததற்குத்தான் வழக்கு என்றார்கள்.
அதன்பின் நடந்த பேச்சுவார்த்தை காரணமாக படம் காலை காட்சியில் வெளியாகாமல் மதியத்திற்கு மேல் தான் வெளியானது. தனக்குக் கொடுக்கப்பட்ட உரிமையை விக்ரம் திருப்பிக் கொடுத்துவிட்டதால் படம் வெளியானது. தன் சம்பள பாக்கியைப் பற்றிக் கவலைப்படாமல் விக்ரம் திருப்பிக் கொடுத்ததை படத்தை வாங்கியவர்களும், திரையுலகினரும் பாராட்டினார்கள்.
தற்போது ஓடிடி உரிமை சிக்கல்கள் பேசித் தீர்த்து அதன் வியாபாரத்தை முடித்துள்ளார்கள். அமேசான் பிரைமில் இப்படம் அடுத்த வாரம் ஏப்ரல் 24ம் தேதி வெளியாக உள்ளது. இந்த சிக்கல்கள் தீர்ந்துள்ளதால் 'வீர தீர சூரன்' முதல் பாகம் பற்றிய அறிவிப்பு வெளிவருமா என விக்ரம் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.