அனைவரும் மறந்து போன 'இந்தியன் 3' | ஜூன் 19ல் 'ஜில்லா, மெர்சல்' ரீ ரிலீஸ்: விஜய் ரசிகர்களுக்கு 'டபுள்' ட்ரீட் | இந்த மாதம் வெளியாகும் தனுஷ் 55 பட தலைப்பு, முதல் பார்வை | இரண்டு சூப்பர் படங்களை மிஸ் செய்த தேஜூ அஸ்வினி | வெனிஸ் நகரில் திருமண நாளைக் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதி டீசர் Vs விஜய் ஆண்டனி டிரைலர், முந்துவது எந்த விஜய்? | வெளியீட்டிற்குப் பின் 'பெத்தி'யைத் தவிர்க்கும் ஜான்வி கபூர் | ஐந்து ரூபாய் டாக்டராக நடிக்கிறாரா ரஜினிகாந்த்...? | 25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு | பூரி ஜெகன்நாத் உருவாக்கியுள்ள பிராண்ட்: பிரமிக்கும் சம்யுக்தா |

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் கார்த்தி, ரவி மோகன் இரண்டு பேரும் நடித்தனர். அப்போதிலிருந்து நெருங்கிய நண்பர்களாகிவிட்ட அவர்கள் தற்போது சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இருமுடி கட்டி சென்றுள்ளார்கள். நடிகர் ரவி மோகன் கடந்தாண்டு மலையாள நடிகர் ஜெயராமுடன் இணைந்து சபரிமலைக்கு சென்று இருந்தார். இந்த நிலையில், இந்த ஆண்டு அவரும், கார்த்தியும் இணைந்து சபரிமலைக்கு சென்றுள்ளார்கள். சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் இருந்து சபரிமலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார்கள். அவர்கள் இருவரையும் கொச்சின் விமான நிலையத்தில் மலையாள நடிகர் திலீப் சந்தித்துள்ளார். அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.