அழகுக்காக அறுவை சிகிச்சையா : ரகுல் ப்ரீத் சிங் பதில் | ''அவுரங்கசீப்புக்கு 2 அறை கொடுக்க வேண்டும்'' ; சூர்யா பட விழாவில் விஜய் தேவரகொண்டா காட்டம் | 'ஜன கன மன' 2ம் பாகம் இருக்கிறது ; உறுதிப்படுத்திய இயக்குனர் | பிரபல மலையாள இயக்குனர் ஷாஜி என்.காருண் மரணம் ; கேன்ஸ் விருது பெற்றவர் | 'பேமிலிமேன்-3' வெப்சீரிஸ் நடிகர் நீர்வீழ்ச்சியில் விழுந்து மரணம் | போதை மீட்பு மையத்திற்கு அனுப்பப்படும் வில்லன் நடிகர் ஷைன் டாம் சாக்கோ | ஜூலையில் திரைக்கு வரும் அனுஷ்காவின் காட்டி படம் | மகாராஜா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது | பிரசாந்த் நீல் - ஜூனியர் என்டிஆர் படம்: அடுத்தாண்டு ஜூன் 25ல் ரிலீஸ் | டிடி நெக்ஸ்ட் லெவல் டிரைலர் எப்போது? |
மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக எம்புரான் படத்தை இயக்கியுள்ளார் பிருத்விராஜ். இந்த படம் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் கலவையான வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் முதல் பாகத்தின் வெற்றிக்கு இசையமைப்பாளர் தீபக் தேவின் பின்னணி இசையும் நாட்டுப்புறப்பாடல் பாணியில் அமைந்திருந்த இரண்டு அதிரடி பாடல்களும் முக்கியமாக தூண்களாக அமைந்திருந்தன.
இந்த இரண்டாம் பாகத்தின் டிரைலரிலேயே தனது மிரட்டலான பின்னணி இசை மூலம் அதிக எதிர்பார்ப்பையும் உருவாக்கி இருந்தார் தீபக் தேவ். இந்த நிலையில் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் ஒன்றின் சிறிய பகுதியை பாடுவதற்கு ஒரு புதிய பெண் குரல் ஒன்றை தேடி வந்தார் தீபக் தேவ். அப்போது பிரித்விராஜின் மகள் அலங்க்ரிதாவின் குரலை கேட்டதும் அவரையே பாட வைக்கலாம் என முடிவு செய்து இந்த படத்தில் அந்த பாடலை பாட வைத்துள்ளார்கள். அந்த வகையில் ஏற்கனவே பிரித்விராஜன் மனைவி ஒரு தயாரிப்பாளராக இருக்கும் நிலையில் அவரது மகளும் சினிமாவில் இந்த பாடல் மூலம் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளார் என்று சொல்லலாம். அது மட்டுமல்ல பிரித்விராஜின் சகோதரர் நடிகர் இந்திரஜித்தின் மகள் பிரார்த்தனாவும் இந்த படத்திற்காக குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.