சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
கடந்த 2020 ஜூன் மாதம் பாலிவுட் இளம் முன்னணி நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது மரணத்திற்கு காரணம் அவரது காதலியான நடிகை ரியா சக்கரபோர்த்தி தான் என்று சுஷாந்தின் தந்தை கே கே சிங் பீகார் போலீசில் இது குறித்து புகார் அளித்தார். அதனை தொடர்ந்து இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்து விசாரித்து வந்தது. இதில் நடிகை ரியா சக்கரபோர்த்தி கைது செய்யப்பட்டு சில மாதம் சிறைவாசம் அனுபவித்து அது பின் ஜாமினில் வெளி வந்தார்.
இந்த வழக்கு விசாரணை துவங்கி கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு மேல் முடிந்த நிலையில் தற்போது இந்த வழக்கு குறித்த முழு விசாரணையையும் முடித்துள்ள சிபிஐ இது குறித்த விபரங்களை சிறப்பு நீதிமன்றம் வசம் ஒப்படைத்துள்ளது. இதனை ஆய்வு செய்த பின்பு தான் இந்த வழக்கில் இந்த விசாரணையே போதுமானதா, அல்லது மீண்டும் விசாரணை செய்ய வேண்டுமா என்பது குறித்த புதிய விபரங்கள் தெரியவரும்.
இந்த நிலையில் ரியா சக்கரபோர்த்தியின் வழக்கறிஞர் இந்த வழக்கு விசாரணையை பல கோணங்களில் ஆராய்ந்து தற்போது முடிவுக்கு கொண்டு வந்துள்ள சிபிஐக்கு தன்னுடைய நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.