விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் |
தமிழ் திரையுலகம் என்கிற அளவிலேயே தனது நடிப்பு பயணத்தை தொடர்ந்து வந்த சத்யராஜ், ராஜமவுலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி' படத்தில் கட்டப்பா கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததன் மூலம் தென்னிந்திய அளவில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் ரொம்பவே பிரபலமாகிவிட்டார். தற்போது பெரிய ஹீரோக்களின் படங்களில் வில்லனாக மற்றும் முக்கிய வேடங்களில் மீண்டும் பிஸியாக நடிக்க துவங்கியுள்ளார் சத்யராஜ்.
அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் உடன் 'கூலி' படத்தில் பல வருடங்களுக்குப் பிறகு அவருடன் இணைந்து நடித்துள்ளார். அதேபோல ஷாருக்கானுடன் இணைந்து 'சென்னை எக்ஸ்பிரஸ்' என்கிற படத்தில் நடித்த சத்யராஜ், நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ஹிந்தியில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள 'சிக்கந்தர்' என்கிற படத்திலும் மெயின் வில்லனாக நடித்துள்ளார். இந்த படம் வரும் மார்ச் 30ம் தேதி வெளியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து மும்பையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்வில் சத்யராஜ் பேசும்போது, “சல்மான் கானின் தந்தை சலீம் கானை சந்திக்கும் பெரும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. நான் கல்லூரி படிக்கும் காலத்தில் சலீம்-ஜாவேத் இருவரும் தங்களது கதைகள் மூலம் எத்தனை ஹீரோக்களை உருவாக்கி இருக்கிறார்கள் என்பதை கேள்விப்பட்டிருக்கிறேன். அவரை சந்தித்தது எனக்கு கிடைத்த பாக்கியம். சொல்லப்போனால் இந்த படத்தில் சல்மான் கானுடன் இணைந்து நடித்ததை விட அவருடைய தந்தையை நான் சந்தித்ததைத்தான் மிகப்பெரிய வாய்ப்பாக நினைக்கிறேன்” என்று கூறினார். தந்தையை பற்றி சத்யராஜ் பெருமையாக கூறியதைக் கேட்டதும் சல்மான் கானுக்கு முகத்தில் மகிழ்ச்சி பொங்கியதை பார்க்க வேண்டுமே..