நல்ல நடிகையாகவே இருக்க ஆசை திரை வண்ணக்கனவுகளுடன் வர்ஷினி | தமிழ் ரசிகர்களை நம்பினேன் : 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா | 'விஜ்ஜ்ஜஜஜு…….' யார் தெரியுமா ? | மீண்டும் இணைந்த களவாணி கூட்டணி | லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் சூரி : இயக்குனர் யார்? | குபேரா படத்தின் 8 நாள் வசூல் என்ன | இலியானாவுக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது | 35 லட்சம் பேக் : கயாடு பதில் சொல்வாரா | விஷ்ணு விஷால் குடும்ப கதையை சினிமாவாக எடுக்கலாம் போல | விஜய்சேதுபதி மகன் படவிழாவில் விஜய்யின் ஜனநாயகன் இயக்குனர் |
தேசத் தந்தை மகாத்மா காந்தி சினிமா மீது அதிக அக்கறை இல்லாதவர். அவர் சினிமாவும் பார்ப்பதில்லை. அதற்காக அவர் சினிமாவுக்கு எதிரானவரும் அல்ல. சிறு வயதில் 'ராம ராஜ்யம்' என்ற நாடகத்தை பார்த்துதான் தான் திருந்தி வாழ்ந்ததாக அவர் தனது சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார். இந்தியாவில் ராம ராஜ்யத்தை உருவாக்க வேண்டும் என்பதே அவரது கனவாகவும் இருந்தது.
அடிக்கடி அவர் ராம ராஜ்யம் குறித்து பேசியும் வந்தார். அப்படியான ஒரு காலகட்டத்தில் உருவான படம்தான் 'ராம ராஜ்யா'. இந்தியில் உருவான இந்த படம் இந்தியா முழுக்க திரையிடப்பட்டது. அந்த வருடத்தில் (1943) அதிக வசூலை கொண்ட படமாகவும் அமைந்தது. இந்த படத்தின் வெளியீட்டுக்கு முன்பு இந்த படம் மகாத்மா காந்திக்கு போட்டுக் காட்டப்பட்டது.
விஜய் பட் என்பவர் இயக்கிய இந்த படத்தில் பிரேம் ஆதிப் ராமராகவும், ஷோப்னா சமர்த்த சீதையாகவும் நடித்திருந்தனர். அமெரிக்காவில் திரையிடப்பட்ட முதல் இந்திய திரைப்படமாகவும் ராம ராஜ்யம் அமைந்தது.