அழகுக்காக அறுவை சிகிச்சையா : ரகுல் ப்ரீத் சிங் பதில் | ''அவுரங்கசீப்புக்கு 2 அறை கொடுக்க வேண்டும்'' ; சூர்யா பட விழாவில் விஜய் தேவரகொண்டா காட்டம் | 'ஜன கன மன' 2ம் பாகம் இருக்கிறது ; உறுதிப்படுத்திய இயக்குனர் | பிரபல மலையாள இயக்குனர் ஷாஜி என்.காருண் மரணம் ; கேன்ஸ் விருது பெற்றவர் | 'பேமிலிமேன்-3' வெப்சீரிஸ் நடிகர் நீர்வீழ்ச்சியில் விழுந்து மரணம் | போதை மீட்பு மையத்திற்கு அனுப்பப்படும் வில்லன் நடிகர் ஷைன் டாம் சாக்கோ | ஜூலையில் திரைக்கு வரும் அனுஷ்காவின் காட்டி படம் | மகாராஜா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது | பிரசாந்த் நீல் - ஜூனியர் என்டிஆர் படம்: அடுத்தாண்டு ஜூன் 25ல் ரிலீஸ் | டிடி நெக்ஸ்ட் லெவல் டிரைலர் எப்போது? |
தேசத் தந்தை மகாத்மா காந்தி சினிமா மீது அதிக அக்கறை இல்லாதவர். அவர் சினிமாவும் பார்ப்பதில்லை. அதற்காக அவர் சினிமாவுக்கு எதிரானவரும் அல்ல. சிறு வயதில் 'ராம ராஜ்யம்' என்ற நாடகத்தை பார்த்துதான் தான் திருந்தி வாழ்ந்ததாக அவர் தனது சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார். இந்தியாவில் ராம ராஜ்யத்தை உருவாக்க வேண்டும் என்பதே அவரது கனவாகவும் இருந்தது.
அடிக்கடி அவர் ராம ராஜ்யம் குறித்து பேசியும் வந்தார். அப்படியான ஒரு காலகட்டத்தில் உருவான படம்தான் 'ராம ராஜ்யா'. இந்தியில் உருவான இந்த படம் இந்தியா முழுக்க திரையிடப்பட்டது. அந்த வருடத்தில் (1943) அதிக வசூலை கொண்ட படமாகவும் அமைந்தது. இந்த படத்தின் வெளியீட்டுக்கு முன்பு இந்த படம் மகாத்மா காந்திக்கு போட்டுக் காட்டப்பட்டது.
விஜய் பட் என்பவர் இயக்கிய இந்த படத்தில் பிரேம் ஆதிப் ராமராகவும், ஷோப்னா சமர்த்த சீதையாகவும் நடித்திருந்தனர். அமெரிக்காவில் திரையிடப்பட்ட முதல் இந்திய திரைப்படமாகவும் ராம ராஜ்யம் அமைந்தது.