சுரேஷ்கோபி படத்துக்காக ஒரு ஊரே ஒரு வாரத்திற்கு திருவிழா கோலத்துக்கு மாறியது | தக் லைப் நடிகருக்கு பதிலடி கொடுத்து வெளியிட்ட பதிவை நீக்கிய இயக்குனர் | இந்திய திரைப்படத்திற்கான அங்கீகாரம் : கமல் | கல்கி 2898 ஏடி ஓராண்டு நிறைவு : அமிதாப்பச்சன் வெளியிட்ட பதிவு | சொர்க்கத்தில் இன்னொரு நாள் : சுற்றலா கொண்டாட்டத்தில் சூர்யா, ஜோதிகா | டூரிஸ்ட் பேமிலி படத்தின் மொத்த வசூல் வெளியானது | சமந்தா, கீர்த்தி சுரேஷ் திடீர் சந்திப்பு | 'டிராகன்' 100வது நாள் விழாவுக்கு 'ஆப்சென்ட்' ஆன ஹீரோயின்ஸ் | கலைத் துறையின் மாஸ்டர் : கமல்ஹாசனுக்கு பவன் கல்யாண் வாழ்த்து | 15 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் அஜித், சரண் கூட்டணி |
1977ம் ஆண்டு 'மீனவ நண்பன்' படமாகிக் கொண்டிருந்த நேரம். அப்போது மிகுந்த சிரமத்தில் இருந்த கவிஞர் முத்துலிங்கம் எம்ஜிஆரை சந்தித்து வாய்ப்பு கேட்டார். மீனவ நண்பன் படத்தில் வாய்ப்பு தருவதாக எம்ஜிஆர் வாக்கு கொடுத்தார்.
பிறகு அதனை எம்ஜிஆர் மறந்து விட்டார். படத்தின் படப்பிடிப்புகள் முடிந்திருந்த தருவாயில் ஒரு பொது நிகழ்ச்சியில் முத்துலிங்கத்தை பார்த்த எம்ஜிஆர் 'மீனவ நண்பன்' படத்தில் நீங்கள் எழுதிய பாடல் எது? என்று கேட்டார். அதற்கு அவர் அந்த படத்தில் பாடல் எழுத தனக்கு வாய்ப்பு வரவில்லை என்று கூறினார். இதைக் கேட்ட எம்ஜிஆர் அதிர்ச்சி அடைந்தார். நான் உங்களுக்கு வாய்ப்பு தருவதாக வாக்கு கொடுத்திருந்தேனே என்று கூறியவர்.
வீட்டுக்கு சென்றதும், இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனை தொடர்பு கொண்டு 'நீங்கள் ஏன் முத்துலிங்கத்திற்கு வாய்ப்பு தரவில்லை' என்று கோபமாக கேட்டார். 'நீங்கள் எதுவும் சொல்லவில்லையே' என்று கூறியிருக்கிறார். உடனே இயக்குனருக்கு போன் செய்து 'படத்தில் இன்னொரு பாடலை சேர்க்க வாய்ப்பிருக்கிறதா?' என்றார். 'படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. இன்னொரு பாடலுக்கு கதையில் வாய்ப்பும் இல்லை' என்றார்.
பரவாயில்லை ஒரு கனவு பாடல் ஒன்றை சேருங்கள். எந்த லாஜிக்கும் மீறாது என்றார். அதன்பிறகு முத்துலிங்கத்தை அழைத்து காதலன், காதலி பாடும் ஒரு கனவு பாடலை எழுதுங்கள் என்றார். மறுநாளே எழுதி கொண்டு போய் கொடுத்தார். அதன்பிறகு பிரமாண்ட அரங்கம் அமைத்து அந்த பாடல் படமாக்கப்பட்டது. இந்த பாடல்தான் படத்தின் ஹெலைட்டாகவும் அமைந்தது.
தங்கத்தில் முகமெடுத்து
சந்தனத்தில் உடல்எடுத்து
மங்கை என்று வந்திருக்கும் மலரோ,
நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ...
- என்ற பாடல்தான் அது. கவிஞர் முத்துலிங்கத்திற்கு இன்று 82வது பிறந்த நாள்.