‛வட சென்னை' பின்னணியில் வெற்றிமாறன் - சிம்பு படம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தாணு | அக்டோபர் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‛வார்-2' | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி? | பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தமா? | தனுஷின் ‛இட்லி கடை' படத்தை வெளியிடும் இன்பன் உதயநிதி! | உங்களை விட்டால் யார் இருக்கா ? அனுஷ்காவிடம் ராணா கலாட்டா | பிஜூமேனன் நடிப்பதாக இருந்த ‛கீர்த்தி சக்ரா' ; மோகன்லாலுக்கு கை மாறியது ஏன் ? இயக்குனர் மேஜர் ரவி புதிய தகவல் | நிவின்பாலியின் படங்களை பாராட்டிய பவன் கல்யாண் | ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியாகும் ‛உப் யே சியாபா' | யார் இடத்தையும் யாரும் பிடிக்கவில்லை: சிவகார்த்திகேயன் |
1977ம் ஆண்டு 'மீனவ நண்பன்' படமாகிக் கொண்டிருந்த நேரம். அப்போது மிகுந்த சிரமத்தில் இருந்த கவிஞர் முத்துலிங்கம் எம்ஜிஆரை சந்தித்து வாய்ப்பு கேட்டார். மீனவ நண்பன் படத்தில் வாய்ப்பு தருவதாக எம்ஜிஆர் வாக்கு கொடுத்தார்.
பிறகு அதனை எம்ஜிஆர் மறந்து விட்டார். படத்தின் படப்பிடிப்புகள் முடிந்திருந்த தருவாயில் ஒரு பொது நிகழ்ச்சியில் முத்துலிங்கத்தை பார்த்த எம்ஜிஆர் 'மீனவ நண்பன்' படத்தில் நீங்கள் எழுதிய பாடல் எது? என்று கேட்டார். அதற்கு அவர் அந்த படத்தில் பாடல் எழுத தனக்கு வாய்ப்பு வரவில்லை என்று கூறினார். இதைக் கேட்ட எம்ஜிஆர் அதிர்ச்சி அடைந்தார். நான் உங்களுக்கு வாய்ப்பு தருவதாக வாக்கு கொடுத்திருந்தேனே என்று கூறியவர்.
வீட்டுக்கு சென்றதும், இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனை தொடர்பு கொண்டு 'நீங்கள் ஏன் முத்துலிங்கத்திற்கு வாய்ப்பு தரவில்லை' என்று கோபமாக கேட்டார். 'நீங்கள் எதுவும் சொல்லவில்லையே' என்று கூறியிருக்கிறார். உடனே இயக்குனருக்கு போன் செய்து 'படத்தில் இன்னொரு பாடலை சேர்க்க வாய்ப்பிருக்கிறதா?' என்றார். 'படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. இன்னொரு பாடலுக்கு கதையில் வாய்ப்பும் இல்லை' என்றார்.
பரவாயில்லை ஒரு கனவு பாடல் ஒன்றை சேருங்கள். எந்த லாஜிக்கும் மீறாது என்றார். அதன்பிறகு முத்துலிங்கத்தை அழைத்து காதலன், காதலி பாடும் ஒரு கனவு பாடலை எழுதுங்கள் என்றார். மறுநாளே எழுதி கொண்டு போய் கொடுத்தார். அதன்பிறகு பிரமாண்ட அரங்கம் அமைத்து அந்த பாடல் படமாக்கப்பட்டது. இந்த பாடல்தான் படத்தின் ஹெலைட்டாகவும் அமைந்தது.
தங்கத்தில் முகமெடுத்து
சந்தனத்தில் உடல்எடுத்து
மங்கை என்று வந்திருக்கும் மலரோ,
நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ...
- என்ற பாடல்தான் அது. கவிஞர் முத்துலிங்கத்திற்கு இன்று 82வது பிறந்த நாள்.