இனி தொடர்ச்சியாக காமெடி படங்களில் சந்தானம் நடிக்கணும் : சிம்பு வேண்டுகோள் | பாரிஸ் தேவாலயத்திற்கு சென்ற நயன்தாரா | பிளாஷ்பேக்: “போஸ்ட் சின்க்ரனைசேஷன்” முறையில் ஒலிப்பதிவு செய்து, வெற்றி கண்ட முதல் தமிழ் திரைப்படம் “ஸ்ரீவள்ளி” | விவாகரத்து பெற்ற நடிகரை காதலிக்கிறாரா மிருணாள் தாக்கூர்? | மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் பாடிய தனுஷ் | டிரம்ப்-ன் வரிவிதிப்பு அறிவிப்பு: இந்தியப் படங்களுக்கு என்ன பாதிப்பு? | நாகார்ஜூனாவின் 100வது படம்: தமிழ் இயக்குனர் இயக்குகிறார் | கொடைக்கானலில் இருந்து சென்னை திரும்பிய விஜய் | மலையாளத்தில் அறிமுகமாகும் கதிர் | தனுஷின் ஹிந்தி படத்தில் இணைந்த பிரகாஷ் ராஜ் |
'தமிழ் படம்' மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் சசிகாந்த், தனது ஒய் நாட் ஸ்டூடியோ சார்பில் காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசுவோம், இறுதி சுற்று, காவியத் தலைவன், விக்ரம் வேதா, கேம் ஓவர், ஜெகமே தந்திரம், பிரம்மயுகம்(மலையாளம்) உள்ளிட்ட பல படங்களை தயாரித்தார்.
தற்போது இயக்குனராகி 'தி டெஸ்ட்' என்ற படத்தை இயக்கி உள்ளார். மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். பாடகி சக்திஸ்ரீ கோபாலன் இசை அமைத்துள்ளார். ஏப்ரல் 4ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
படம் பற்றி சசிகாந்த் அளித்த பேட்டி வருமாறு: திரைப்படம் இயக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தயாரிப்பாளரானேன். 12 வருடங்களுக்கு முன்பு எழுதிய 'தி டெஸ்ட்' கதையை இப்போதுதான் இயக்க முடிந்தது.
இது கிரிக்கெட் போட்டியை மையமாக கொண்ட படம். இந்தியா, பாகிஸ்தான் மேட்ச் நடப்பது போன்ற காட்சி இடம் பெறுகிறது. சித்தார்த் மற்றும் ரஞ்சி போட்டிகளில் விளையாடிய 22 நிஜ கிரிக்கெட் வீரர்கள் நடித்துள்ளனர். சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் கிரிக்கெட் மேட்ச் படமானது.
கதைப்படி மாதவன், நயன்தாரா, சித்தார்த், கேரக்டர்களுக்கு கடினமான காலக்கட்டம் ஏற்படும்போது, எப்படி அதை எதிர்கொண்டு ஜெயிக்கிறார்கள் என்பது கதை. ஒரேநாளில் பல கோடி ரசிகர்களை சென்றடைய வேண்டும் என்பதற்காகவே ஓடிடி தளத்தில் வெளியிடுகிறோம் என்றார்.