காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

'தமிழ் படம்' மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் சசிகாந்த், தனது ஒய் நாட் ஸ்டூடியோ சார்பில் காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசுவோம், இறுதி சுற்று, காவியத் தலைவன், விக்ரம் வேதா, கேம் ஓவர், ஜெகமே தந்திரம், பிரம்மயுகம்(மலையாளம்) உள்ளிட்ட பல படங்களை தயாரித்தார்.
தற்போது இயக்குனராகி 'தி டெஸ்ட்' என்ற படத்தை இயக்கி உள்ளார். மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். பாடகி சக்திஸ்ரீ கோபாலன் இசை அமைத்துள்ளார். ஏப்ரல் 4ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
படம் பற்றி சசிகாந்த் அளித்த பேட்டி வருமாறு: திரைப்படம் இயக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தயாரிப்பாளரானேன். 12 வருடங்களுக்கு முன்பு எழுதிய 'தி டெஸ்ட்' கதையை இப்போதுதான் இயக்க முடிந்தது.
இது கிரிக்கெட் போட்டியை மையமாக கொண்ட படம். இந்தியா, பாகிஸ்தான் மேட்ச் நடப்பது போன்ற காட்சி இடம் பெறுகிறது. சித்தார்த் மற்றும் ரஞ்சி போட்டிகளில் விளையாடிய 22 நிஜ கிரிக்கெட் வீரர்கள் நடித்துள்ளனர். சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் கிரிக்கெட் மேட்ச் படமானது.
கதைப்படி மாதவன், நயன்தாரா, சித்தார்த், கேரக்டர்களுக்கு கடினமான காலக்கட்டம் ஏற்படும்போது, எப்படி அதை எதிர்கொண்டு ஜெயிக்கிறார்கள் என்பது கதை. ஒரேநாளில் பல கோடி ரசிகர்களை சென்றடைய வேண்டும் என்பதற்காகவே ஓடிடி தளத்தில் வெளியிடுகிறோம் என்றார்.




