விஜய்க்கு வாழ்த்து போட்டோ: பரபரப்பை ஏற்படுத்திய திரிஷா | தென்னிந்தியப் படங்கள் இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்றன : பவன் கல்யாண் | 'ஹிட் 3' மீது கதை திருட்டு வழக்கு | விஜய் மல்லையாவை பார்த்து குடிப்பதை நிறுத்தினேன்: ராஜு முருகன் சொல்கிறார் | விஜயதேவரகொண்டா மீது வன்கொடுமை வழக்கு பதிவு | பிளாஷ்பேக்: கங்கை அமரனை நம்பி ஏமாந்த ஏவிஎம் | பிளாஷ்பேக்: அண்ணி உறவை பேசிய முதல் படம் | குபேரா : தனுஷைப் பாராட்டிய சிரஞ்சீவி | 'ஜனநாயகன்' முன்னோட்ட வீடியோ: பார்வைகளில் முன்னணி, விருப்பங்களில் பின்னணி | ஒய்.ஜி.மகேந்திரனின் 'சாருகேசி': ரஜினி சொன்னதால் படம் இயக்கிய சுரேஷ்கிருஷ்ணா |
புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை' ஆகிய படங்களை இயக்கிய கே.பி.ஜெகன், 'ரோஜா மல்லி கனகாம்பரம்' எனும் படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். அவரே இயக்கவும் செய்கிறார். இந்த படத்தை 'மாயாண்டி குடும்பத்தார்' படத்தை தயாரித்த யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.கே.செல்வகுமார் தயாரிக்கிறார்.
இப்படத்திற்கான தொடக்க விழா மற்றும் டைட்டில் டீசருக்கான படப்பிடிப்பு திருச்செந்தூர் அருகே உள்ள சாஸ்தா கோவிலில் நடைபெற்றது. மேலும் இப்படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
படத்தைப் பற்றி இயக்குநர் கே.பி.ஜெகன் கூறும்போது ''என்னுடைய வாழ்வில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் நான் கதையின் நாயகனாக நடிக்கிறேன். இத்திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாகும்'' என்றார்.