பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு | 30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் | தனி இடத்தை பிடிப்பதற்காக சவால்களை எதிர்கொள்கிறேன் : பிந்து மாதவி |
இசையமைப்பாளர் இளையராஜா லண்டனில் உள்ள ஈவன்டின் அப்போலோ அரங்கத்தில் மார்ச் 8ம் தேதி சிம்பொனி இசையை அரங்கேற்றி அசத்தினார். இதற்கு பல தலைவர்கள், பிரபலங்கள், ரசிகர்கள், அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். முன்னதாக இளையராஜா லண்டன் கிளம்பும் முன்பு அவரை நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். சிம்பொனி இசை நிகழ்ச்சியை முடித்து சென்னை திரும்பிய அவருக்கு தமிழக அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினை, இளையராஜா சந்தித்து பேசினார். அந்த வீடியோவை பகிர்ந்து, ‛‛லண்டன் மாநகரில் சிம்பொனி சாதனை படைத்து திரும்பியுள்ள இளையராஜா, அவரது பயணத்துக்கு வாழ்த்திய என்னை நேரில் சந்தித்து நன்றி கூறினார். அவரது அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம். ராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் வாழும் ரசிகர்களின் பங்கேற்போடு இந்த விழா சிறக்கும்'' என ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.