நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

இந்தியாவின் முதல் பேசும் படம் 'ஆலம் ஆரா' வெளியான நாள் இன்று (1931, மார்ச் 14). ஹிந்தியில் முதன் முறையாக பேசி, பாடி நடிக்கப்பட்டு வெளிவந்தது. இந்தப்படத்தை அர்தேஷிர் இரானியின் இம்பீரியல் பிலிம் கம்பெனி தயாரித்தது. அர்தேஷிர் இரானி இயக்கினார்.
124 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தில் மாஸ்டர் விட்டல், சுபைதா, ஜில்லூ, சுசீலா, பிருத்விராஜ் கபூர் ஆகியோர் நடித்துள்ளனர். ஜோசப் டேவிட், முன்ஷி ஜாகீர் கதை எழுத பெரோஸ்ஷா எம். மிஸ்ட்ரி, பி. இரானி இசையமைத்தனர். வில்போர்டு டெமிங், ஆடி. எம். இரானி ஆகியோர் இப்படத்தினை ஒளிப்பதிவு செய்தனர்.
இந்த படம் தொடங்கப்படுவதற்கு முன்பு படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகைகள் 3 மாதம் வரை பயிற்சி செய்து அதன் பின்னரே தங்கள் பணியை செய்தார்கள். காரணம் அன்று பிலிம் ரோல்களின் விலை அதிகம், கிடைப்பதும் அரிதாக இருந்தது.
படத்தின் கதை பார்ஸி நாடகம் ஒன்றை தழுவி எடுக்கப்பட்டது. நாடகத்தின் வசனங்களும், பாடல்களுமே படத்தில் இடம்பெற்றது. தபேலா, ஹார்மோனியம், வயலின் இந்த மூன்றும் தான் இசைக்கருவிகள்.
'ஆலம் ஆரா' என்றால் உலகத்தின் ஆபரணம் என்று பொருள். ஆனால் ஆலம் ஆரா இந்திய சினிமாவின் ஆபரணம்.