அனுபமா பரமேஸ்வரன் படத்தில் நடிக்கும் சமந்தா | விலை உயர்ந்த காரை வாங்கிய ஊர்வசி ரவுட்டேலா | விஜய் ஆண்டனியின் சக்தி திருமகன் படத்தின் டீசர் வெளியானது | சம்பள பாகுபாடு : சமந்தா முன்னெடுத்த செயல் | டான்சர் என்ற முத்திரையை உடைக்க விரும்பும் ஸ்ரீலீலா | இயக்குனர் அவதாரம் எடுக்கும் ரவி மோகன் : ஹீரோ யார் தெரியுமா? | பராசக்தி படத்தில் இணைந்த குரு சோமசுந்தரம், பசில் ஜோசப் | ராஜமவுலி படப்பிடிப்பு: ஒடிசா துணை முதல்வர் மகிழ்ச்சி | 'புஷ்பா 2' படத்திற்குப் பிறகு மீண்டும் தெலுங்கில் சாம் சிஎஸ் | 33 வருட இடைவெளிக்குப் பிறகு இயக்குனராக கே ரங்கராஜ் |
நடிகர்களுக்கு இணையாக நடிகைகளுக்கும் அல்லது ஆண் திரை கலைஞர்களுக்கு நிகராக பெண் திரை கலைஞர்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மெல்ல மெல்ல வலுத்து வருகிறது. இந்த விஷயத்தை நடிகை சமந்தா ஒரு தயாரிப்பாளராக முன்னெடுத்துள்ளார்.
சமீபத்தில் திரலாலா மூவிங் பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவக்கினார் சமந்தா. இவர் தயாரிப்பில் உருவாகும் ஒரு படத்தை பெண் இயக்குனர் நந்தினி ரெட்டி இயக்க உள்ளார். இது இவர்கள் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படமாகும். சமந்தாவே இதில் கதையின் நாயகியாக நடிக்க போகிறார். இந்த படத்தில் பாலின பாகுபாடு இன்றி சம்பளம் வழங்க போகிறாராம் சமந்தா.
இதுபற்றி இயக்குனர் நந்தினி கூறுகையில், ‛‛நடிகை சமந்தா ஒரு தயாரிப்பாளராக பாலின பாகுபாடு இன்றி சம்பளம் வழங்க போவதாக தெரிவித்துள்ளார். அதாவது இதில் பணியாற்றும் ஆண் கலைஞர்களுக்கு என்ன சம்பளம் வழங்கப்படுமோ அதே சம்பளம் தான் பெண் கலைஞர்களுக்கும் வழங்கப்படும். இந்திய சினிமாவிலேயே இதுவரை யாரும் இப்படி ஒரு விஷயத்தை முன்னெடுத்து செய்யவில்லை'' என்றார்.
சமந்தாவின் இந்த விஷயம் பாராட்டுகளை பெற்று வருகிறது.