அஞ்சான் படத்தை ரீ-எடிட் செய்து மீண்டும் ரிலீஸ் செய்யும் லிங்குசாமி | 45வது படத்தில் கடவுள் வேடத்தில் நடிக்கும் சூர்யா | பிளாஷ்பேக்: சொப்பன சுந்தரி யார் தெரியுமா? | ஜூலை 18ல் ரீ ரிலீஸ் ஆகும் நாகசைதன்யா, சமந்தா படம் | பிளாஷ்பேக்: பாண்டியராஜனுக்காக ஆஸ்பத்திரி வாசலில் படுத்துக் கிடந்த கொல்லங்குடி கருப்பாயி | மகளின் விழாவில் குடும்பத்துடன் நடனமாடிய ஏ.ஆர்.முருகதாஸ் | நான் இன்னமும் என்னை ஒரு நடிகராகவே கருதுகிறேன் : அமீர்கான் | வளர்ந்து வரும் நடிகர் சங்கக் கட்டுமானம்: வீடியோ வெளியீடு | 'காந்தாரா' ஷூட்டிங்கில் மீண்டும் விபத்து | 'வட சென்னை' முன்பகுதி கதையில் வெற்றிமாறன் - சிலம்பரசன் கூட்டணி? |
நடிகர்களுக்கு இணையாக நடிகைகளுக்கும் அல்லது ஆண் திரை கலைஞர்களுக்கு நிகராக பெண் திரை கலைஞர்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மெல்ல மெல்ல வலுத்து வருகிறது. இந்த விஷயத்தை நடிகை சமந்தா ஒரு தயாரிப்பாளராக முன்னெடுத்துள்ளார்.
சமீபத்தில் திரலாலா மூவிங் பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவக்கினார் சமந்தா. இவர் தயாரிப்பில் உருவாகும் ஒரு படத்தை பெண் இயக்குனர் நந்தினி ரெட்டி இயக்க உள்ளார். இது இவர்கள் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படமாகும். சமந்தாவே இதில் கதையின் நாயகியாக நடிக்க போகிறார். இந்த படத்தில் பாலின பாகுபாடு இன்றி சம்பளம் வழங்க போகிறாராம் சமந்தா.
இதுபற்றி இயக்குனர் நந்தினி கூறுகையில், ‛‛நடிகை சமந்தா ஒரு தயாரிப்பாளராக பாலின பாகுபாடு இன்றி சம்பளம் வழங்க போவதாக தெரிவித்துள்ளார். அதாவது இதில் பணியாற்றும் ஆண் கலைஞர்களுக்கு என்ன சம்பளம் வழங்கப்படுமோ அதே சம்பளம் தான் பெண் கலைஞர்களுக்கும் வழங்கப்படும். இந்திய சினிமாவிலேயே இதுவரை யாரும் இப்படி ஒரு விஷயத்தை முன்னெடுத்து செய்யவில்லை'' என்றார்.
சமந்தாவின் இந்த விஷயம் பாராட்டுகளை பெற்று வருகிறது.